முந்தய பக்கம்

திருவள்ளுவர் தினம் அனுசரிப்பு

18 Jan 2026, 4:50 pm
திருவள்ளுவர் தினம் அனுசரிப்பு
<p><strong>திருவள்ளுவர் தினம் அனுசரிப்பு</strong></p> <p>உடுமலை, ஜன.18- உடுமலையில் வெள்ளியன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அய்யலு மீனாட்சி &nbsp;நகரில் திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் சார்பில், 25 &nbsp;ஆம் ஆண்டு விழா ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை யில் வெள்ளியன்று நடைபெற்றது. திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் பொறுப்பாளர் அருள்கணேசன் வரவேற்றார். இதன்பின் திருவள்ளுவர் சிலைக்கு &nbsp;மாலை அணிவித்து, திருக்குறள் திறனறிப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் பேசுகையில், இனி வரும் காலங்களில் &nbsp;நமது பகுதியில் மாணவர்கள், பெரியவர்கள் என &nbsp;யாராக இருந்தாலும் 1330 திருக்குறள்களை ஒப்பு விக்கும் நபர்களுக்கு ரூ.5000 ரொக்கத்தொகையும், நினைவுப்பரிசாக திருவள்ளுவர் கோப்பையும் வழங்குவதாக அறிவித்தார். மேலும், தேசிய பளு தூக்கும் போட்டியில் துருக்கி, இஸ்தான்புல் போன்ற &nbsp;நாடுகளில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் &nbsp;பெற்ற வீரருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram