தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்கு தடை!

8 Apr 2026, 1:27 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்கு தடை!
<p>திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்குகளில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.</p><p>முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், அடுத்த ஆண்டு இரு இடங்களிலும் தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.</p><p>இந்நிலையில், அதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். மேலும், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தீபத்தூண் போன்ற வடிவமைப்பில் தீபம் ஏற்றி ‘சனாதனம்’ குறித்து உரையாற்றினார்.</p><p>இதனைத் தொடர்ந்து, ஒரு நீதிபதி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டி, திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்குகளை அவர் விசாரிக்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ள நிலையில், தனி நீதிபதி விசாரணை நடத்த முடியாது என தெரிவித்தது. மேலும், இதுவரை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.</p><p>இதனுடன், இனி இந்த விவகாரம் தொடர்பான எந்த வழக்கையும் அவர் விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.