நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம்
19 Jul 2026, 10:42 pm
<p>நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், உயிரிழந்த விசிக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு நிதி யுதவி வழங்கும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படங் களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சியினர் வழங்கிய நிதியில் இருந்து மொத்தம் ரூ.7.50 லட்சம் நிதியுதவியை குடும்பத்தினரிடம் வழங்கினார்.</p>
