அடம் பிடிக்கிறார்கள்..!
13 Dec 2025, 1:22 pm
<p><strong>அடம் பிடிக்கிறார்கள்</strong></p>
<p>தொழில்நுட்ப வளர்ச்சியால் திரையுலகம் பல அதிரடிகளைக் காண்கிறது. “வா வாத்தியார்” என்ற திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆரின் வாள்வீச்சுக் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றனவாம். நாயகன் பகலில் சாதாரண மனிதனாகவும், இரவில் மட்டும் எம்.ஜி.ஆர் ஆகவும் மாறுவதை வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது. நாயகன் உடலில் இரவில் மட்டும் எம்.ஜி.ஆரின் ஆவி புகுந்து கொள்கிறதாம். படமாக்குவதற்கு அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ளும் திரையுலகத்தின் ஒரு பகுதியினர் இன்னும் மூட நம்பிக்கைகளை விட்டு வெளிவராமல் அடம் பிடிக்கிறார்கள்.</p>
