அவர்களை காணவில்லை..!
28 Mar 2026, 4:13 pm
<p><strong>அவர்களை காணவில்லை..!</strong></p>
<p>அவர்களை காணவில்லை பேருந்துநிலையம் செல்லும் போதெல்லாம் கவனிக்க முடியும்… நடைபாதை வசிப்பு நாடோடி வாசிகள்… சாக்பீஸ் கரித்துண்டுகள் சில கலர் பொடிகள்… பேருந்து நுழைவிடவோரம் காத்திருப்போர் வேடிக்கை பார்த்திருக்க… எட்டுக்குப்பத்து பதினைந்தடிக்குள் ஏதாவதொரு உருவத்தை சொற்பநேரத்தில் வரைவர்… திறமைக்கான சன்மானச் சில்லரை விழும் யாரிடமிருந்தாவது இரண்டு ஐந்து பத்து ரூபாய்த் தாளும் தான்… சற்றே பொழுதிறங்க சன்மானத்துடன் அவர்கள் எழுந்து போக… சாரை சாரையாக நடக்கும் காலடிகளில் கலைந்து போகும் ஓவியத்துகள்களாக அவர்களை காணவில்லை..!</p>
