மதவாத அரசியல் செய்வோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை!
28 Jan 2026, 2:33 pm
<p><strong>மதவாத அரசியல் செய்வோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை!</strong></p>
<p>முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி சென்னை, ஜன. 28 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், திமுக “ஆட்சிக்கு வந்த 1,728 நாட் களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்!” நடந்துள்ளதாக பட்டியலிட்டுள்ளார். “ஆயிரமாவது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 2023-ஆம் ஆண்டு நடைபெற்றது. 2 ஆயிரமாவது குடமுழுக்கு மயிலாடுதுறை கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவிலில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்றது. 3 ஆயிரமாவது குடமுழுக்கு நாகை திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 2025ஆம் ஆண்டு நடைபெற்றது. 4 ஆயிரமாவது குடமுழுக்கு இன்று (ஜன.28) பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில் நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டிருக்கும் மு.க. ஸ்டாலின், “இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை!” என்றும், “மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!” என்றும் தெரிவித்துள்ளார்.</p>
