தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சூறாவளிக்காற்றால் வாழைகள் சாய்ந்து பாதிப்பு

29 May 2026, 10:12 pm
சூறாவளிக்காற்றால் வாழைகள் சாய்ந்து பாதிப்பு
<p><strong>சூறாவளிக்காற்றால் வாழைகள் சாய்ந்து பாதிப்பு</strong></p><p>தேனி ,மே 29- சூறாவளிக் காற்றால் வாழைகள் சாய்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . </p><p>தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மே 29 வெள்ளியன்று நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண், உதவி வனப் பாதுகாவலர் சாய் சரண் ரெட்டி , வேளாண்மை இணை இயக்கு நர் சாந்தாமணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு) நர்மதா, கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர்(விவசாயம்) இரா.வளர்மதி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். </p><p> இக்கூட்டத்தில் பண்ணைப்புரத்தை சேர்ந்த விவசாயி ஜெகதீஸ்வரன் என்பவர் சூறாவளிக் காற்றால் வாழைகள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்தால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதாக கூறி கேனில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து ஊற்ற முயன்றார் .</p><p>பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர் . விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட வன அலுவலர் கிரண் உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர் .கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால்,மாவட்ட வன அலுவலர் கிரண் , கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலரிடம் சொல்லாமலேயே கிளம்பி விட்டார் . </p><p>தேனி மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் கௌரவ நிதி பெரும் திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 26,050 பயனாளிகளில் இதுவரை 23,550 பயனாளிகள் மட்டுமே விவசாய அடையாள எண் பெற்றுள்ளனர்.</p><p> மீதமுள்ள பிற விவசாயிகளும் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடைய உடனடியாக விவசாய அடையாள எண்ணை பதிவுசெய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார் . பட்டா மாறுதலுக்கு அலைக்கழிப்பு கூட்டத்தில் பேசிய விவாசாயிகள் ,வட்டாட் சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதலு க்கு அலைக்கழிக்கப்படுவதாகவும் ,மின் வாரியத்தில் இலவச இணைப்பு வழங்கு வதில் முறைகேடு உள்ளதாகவும் தெரி வித்தனர். </p><p>கடந்த கனமழை காலத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை .உடனடியாக வழங்க வேண்டும் என தெரி வித்தனர் .</p><p>உரங்களை கூடுதல் விலையில் வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர் .</p><p>அதற்கு உரங்களின் விலை கூடுதலாக விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.