முதியோர் -மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் விநியோகம் தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
20 Mar 2026, 2:55 pm
<p>முதியோர் -மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் விநியோகம் தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு</p>
<p> தேனி ,மார்ச் 20- மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று 12-டி படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு மேற்கொண்டார். வாக்குப்பதிவு நாளான்று வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்குகளை உறுதி செய்யும் விதமாக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தபால் வாக்கினைப் பதிவு செய்திட உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு செலுத்துவதற்கான 12-டி படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விவரங்களை அறிய 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். ஆய்வு ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாச்சியார் ்புரம் மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதிகளில் மூத்த குடிமக்கள் (85 வயதிற்கு மேற்பட்டோர்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று 12 டி படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சதீஸ்குமார், ஜாஹிர் உசேன் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் செல்வி பார்கவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
