தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரம்
11 Jul 2026, 8:55 pm
<p><strong>தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரம்</strong></p><p>திண்டுக்கல்லில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று எம்.வி.எம். நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட சந்தாக்கள் பெறப்பட்டன. இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.அரபுமுகமது, தமுஎகச மாநகரச் செயலாளர் வைத்திலிங்கபூபதி, அஞ்சல் ஓய்வூதியர் சங்கத் தலைவர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>தமிழக வெற்றிக் கழக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி, தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா தொகையை சிபிஎம் தேனி தாலுகா செயலாளர் இ.தர்மரிடம் வழங்கினார். அருகில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை.'</p><p>ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், தீக்கதிர் நாளிதழுக்கு ஆண்டு சந்தாவினை சிபிஎம் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசனிடம் வழங்கினார். அருகில் ஒன்றியச் செயலாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம், பி.டி.ராஜா உள்ளிட்டோர்.</p>
