தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday
<p><strong>தீக்கதிர் முக்கிய செய்திகள்</strong></p><p><strong>பிடிபி தலைவர் மெகபூபா முப்தி</strong></p><p>பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்ததை வரவேற்கிறேன். அதே போல பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த இந்தியா, காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் தனியான தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும்.</p><p><br></p><p><strong>சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே</strong></p><p>சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த, மத்தியப்பிரதேசத்தின் பாலகாட் பழங்குடியின கிராமத்தில் உள்ள குடிநீர் குழாயை நேரில் ஆய்வு செய்தேன். மிக மோசமான நிலையில் இருந்தது. அம்மாநில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் அவர்களுடைய சொந்தக் குழந்தைகளுக்கு இந்த நீரை குடிக்க கொடுப்பார்களா?</p><p><br></p><p><strong>ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால்</strong></p><p>கோவாவில் காங்கிரசும் பாஜகவும் ரகசியக் கூட்டணியில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜகவை காங்கிரஸ் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கட்சித் தாவலால் பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆரோக்கியமான அரசியல் அல்ல.</p><p><br></p><p><strong>ராஷ்டிரிய ஜனதா தளம்</strong></p><p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளிதழ்களில் தில்லி பாஜக அரசு பெரியளவில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் விநாயகரை விட பிரதமர் மோடி, தில்லி பாஜக அமைச்சர் பெரிதாக உள்ளனர். கடவுளுக்கு வந்த சோதனை இது.</p><p><br></p><p><br></p>
