தீக்கதிர் முக்கிய செய்திகள்
2 Jun 2026, 8:24 pm
<p><strong>காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்</strong></p><p>உலகமே இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் நிலையில், பிரதமர் மோடி மட்டும் மவுனம் காப்பதன் மூலம் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு உதவுகிறாரா? அவருக்கு தாய்நாட்டை விட தந்தை நாடு முக்கியமாகிவிட்டதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இந்திய நலன்களை பாதுகாக்க மோடி தவறிவிட்டார்.</p><p><strong>ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்</strong></p><p>பாஜக தலைவர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அடுத்த நாளே நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இன்று அதானிக்கு ஆதரவாக வேதாந்தா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><strong>உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்சு</strong></p><p>முக்கிய தலைவர்கள் பலர் திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். பாஜகவின் மிரட்டல் </p><p>மற்றும் மத்திய அமைப்புகளின் நெருக்கடிக்கு அக்கட்சியினர் பயப்படுகிறார்கள். இதனால்தான், மூழ்கும் கப்பலில் இருந்து எலிகள் தப்பியோடுவதைப் போல, திரிணாமுல் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறுகிறார்கள்.</p><p><strong>கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே</strong></p><p>ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்துவதற்காக நான் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளேன். தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் அமைதி போராட்டத்தில் இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.</p><p><br></p><p><br></p>
