முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

1 Jul 2026, 8:49 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்</strong></p><p>ஈரான் மீதான போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், தொழில்துறைகள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொண்டனர். இதன் விளைவுகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால், முக்கிய ஊடகங்களின் செய்திகள் ஆட்சியாளர்கள் முன்வைக்கும் பிரச்சாரங்களுக்குள்ளேயே முடங்கிப்போயுள்ளன.</p><p><strong>மே.வ.காங்கிரஸ் தலைவர் சுபங்கர் சர்க்கார்</strong></p><p>தேர்தல் ஆணையம் ஒரு காலத்தில் கொண்டிருந்த கண்ணியத்தையும் நம்பகத்தன்மையையும் ஞானேஷ் குமார் முற்றிலுமாகச் சிதைத்துவிட்டார். இவ்வளவு காலமும் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்த்து வந்தது. ஆனால் ஞானேஷ் குமார் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. அவர் பாஜக பேச்சை மட்டுமே கேட்கிறார்.&#39;</p><p><strong>மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்</strong></p><p>பாஜகவும் அதன் குண்டர்களும் ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கி, இந்த நாட்டை ஒரு குண்டர் ராஜ்ஜியமாக மாற்றி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, நமது அமைப்புகள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.</p><p><strong>சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ்</strong></p><p>ராமர் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்விரண்டிற்கும் பாஜக துரோகம் இழைத்துள்ளது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram