தீக்கதிர் துணை ஆசிரியர் ப.விஜயகுமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
12 Jun 2026, 9:25 pm
<p><strong>தீக்கதிர் துணை ஆசிரியர் ப.விஜயகுமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா</strong></p><p>மதுரை,ஜூன் 12- தீக்கதிர் நாளிதழ் மதுரைப்பதிப் பில் துணை ஆசிரியராக பணியாற்றிய ப.விஜயகுமாருக்கு பணிநிறைவு பாராட்டுவிழா ஜூன் 11 வியாழனன்று தீக்கதிர் வளாகத்தில் நடைபெற்றது.</p><p> 1981 ஆம் ஆண்டு தீக்கதிரில் பணி யில் சேர்ந்த ப.விஜயகுமார், பிழை திருத்துநராகவும் செய்திக்களஞ்சியம் பிரிவிலும் நீண்டகாலம் பணி யாற்றினார். </p><p>பின்னர் ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்டு, துணை ஆசிரியராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தார். 45 ஆண்டு கள் தீக்கதிர் நாளிதழில் பணியாற்றி யுள்ளார். </p><p>தோழர் ப.விஜயகுமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் தலை மையில் நடைபெற்றது. முன்னாள் ஆசி ரியர் வி.பரமேசுவரன், முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி ஆகி யோர் அவருக்கு சால்வை அணி வித்து நினைவுப்பரிசு வழங்கி, பாராட்டி பேசினர். </p><p>சிறப்பு ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், முன்னாள் செய்தி ஆசிரியர் ப.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ப.விஜயகுமார் ஏற்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா மற்றும் தீக்கதிர் ஊழியர்கள் பங்கேற்றனர்.</p>
