அமெரிக்காவை நம்பியவர்களுக்கு போர் தரும் ஏமாற்றம்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>அமெரிக்காவை நம்பியவர்களுக்கு போர் தரும் ஏமாற்றம்</strong></p>
<p>போரின் தொடக் கத்தில், அமெ ரிக்கா மற்றும் இஸ்ரே லின் தாக்குதல்கள் ஈரா னிய ஆட்சியாளர்களை வீழ்த்தித் தங்களுக்கு ‘விடுதலையைப்’ பெற்றுத்தரும் என, அமெரிக்காவின் தூண்டு தலால் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஈரானியர்கள் பலர் நம்பினர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டங்க ளின் போது ஆட்சி மாற்றம் என்ற அமெ ரிக்காவின் முழக்கம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது போர் தீவிரம டைந்துள்ள நிலையில் நகரங்கள் சீரழிந்து வருகின்றன. போர் முடிந்தா லும் அதே கடுமையான ஆட்சி மற்றும் சர்வதேசப் பொருளாதாரத் தடைக ளுக்கு மத்தியிலேயே தாங்கள் வாழ வேண்டியிருக்கும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அரசின் பிடி மேலும் இறுகுவதோடு, அதிருப்தியா ளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிர மடையக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. அமெரிக்காவின் போர், தங்களுக்கு பேரழிவையே தந்துள்ளதாக அவர்கள் வேதனைப்படுகின்றனர்.</p>
