தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“படைப்பாற்றல் அற்றவர்கள் இப்போது தீர்மானிக்கிறார்கள்” பாலிவுட்டில் அதிகாரக் கட்டமைப்பு மாற்றத்தை வெளிப்படுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல்

18 Jan 2026, 4:50 pm
“படைப்பாற்றல் அற்றவர்கள் இப்போது தீர்மானிக்கிறார்கள்”  பாலிவுட்டில் அதிகாரக் கட்டமைப்பு மாற்றத்தை வெளிப்படுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல்
<p><strong>&ldquo;படைப்பாற்றல் அற்றவர்கள் இப்போது தீர்மானிக்கிறார்கள்&rdquo; &nbsp;பாலிவுட்டில் அதிகாரக் கட்டமைப்பு மாற்றத்தை வெளிப்படுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல்</strong></p> <p>சென்னை/மும்பை, ஜன.18- &nbsp;ஆஸ்கார் விருது பெற்ற உலகப்புகழ் பெற்ற &nbsp;- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இந்தி &nbsp;திரைத்துறையில் கடந்த எட்டு ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் அதிகாரக் கட்டமைப்பு மாற்றத் தையும், அதனால் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு களையும் பிபிசி நேர்காணலில் வெளிப்படுத்தி யுள்ளார். கலை சுதந்திரம் மற்றும் தொழில்முறை நேர்மை குறித்து அவர் எழுப்பியுள்ள சில நியாய மான கேள்விகளை, உடனடியாக எதிர்வினை என்ற பெயரில் மதவாத சக்திகள் வசதியாக திசை திருப்பி, அவர் மீது வன்மமான தாக்குதலைத் &nbsp;தொடுத்துள்ளனர்; இதுவே தற்கால இந்தியா வின் அரசியல் சூழலைப் பிரதிபலிக்கிறது. அதிகார மாற்றத்தின் காலவரிசை: 2016 - 2024 பிபிசி ஆசியன் நெட்வொர்க்கிற்கு அளித்த நேர்காணலில் ரஹ்மான் சுட்டிக்காட்டிய கால கட்டம் மிகவும் முக்கியமானது. &ldquo;கடந்த எட்டு &nbsp;ஆண்டுகளாக அதிகாரம் மாறியுள்ளது. படைப் &nbsp;பாற்றல் இல்லாதவர்கள் இப்போது விஷ யங்களை தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர்&rdquo; என்று அவர் குறிப்பிடுகிறார். 2016 முதல் 2024 வரையிலான இக்காலகட்டம், இந்தி யாவில் வலதுசாரி மத வாதம் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அதிகாரத்தைக் கைப் &nbsp;பற்றிய காலகட்டத்துடன் துல்லியமாக ஒத்துப் போகிறது. இசை நிறுவனங்கள் இசையமைப்பாளர் களைத் தேர்வு செய்யும் முறையில் ஏற்பட்டுள்ள &nbsp;மாற்றத்தை &ldquo;சைனீஸ் விஸ்பர்ஸ்&rdquo; (Chinese Whispers) என்று அவர் சாடியுள்ளார். இதன் &nbsp;பொருள், ஒரு விஷயம் அடுத்தடுத்த நபர்களிடம் &nbsp;செல்லும் போது அது திரிக்கப்பட்டு முற்றிலும் &nbsp;வேறு வடிவம் எடுப்பதாகும். இது, உண்மை களைப் புரிந்து கொள்ள சிறுவர்களுக்கு நடத்தப் &nbsp;படும் விளையாட்டாகும். &ldquo;உங்களை ஒப்பந்தம் &nbsp;செய்துவிட்டார்கள், ஆனால் அதேநேரம் இசை &nbsp;நிறுவனம் தங்களின் ஐந்து இசையமைப்பா ளர்களை நியமித்துவிட்டது என்று மறைமுகத் &nbsp;தகவல்கள் வருகின்றன&rdquo; என்ற ரஹ்மானின் ஆதங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலை யீடு ஒரு கலைஞரின் வாழ்வாதாரத்தை எப்படிச் &nbsp;சிதைக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. &ldquo;இது ஒரு மத ரீதியான பாகுபாடாகவும் இருக்க லாம், ஆனால் என் முன்னால் யாரும் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை&rdquo; என்ற அவரது கூற்று, திரைத்துறையின் திரைக்குப் பின்னால் நிலவும் மறைமுகப் பாகுபாட்டை (Systemic Bias) சுட்டிக்காட்டுகிறது. வன்மமான எதிர்வினைகள் ரஹ்மானின் இந்தக் கருத்துக்களுக்கு எதி ராகத் திரண்ட விமர்சனங்கள், அவர் சந்தித்த பாகுபாட்டை உண்மை என நிரூபிக்கும் வகை யிலேயே அமைந்துள்ளன. பாஜக ஆதரவு நடிகை யான காங்கனா ரனாவத், ரஹ்மானை &ldquo;பாரபட்ச மானவர்&rdquo; என்றும் &ldquo;வெறுப்பு நிறைந்தவர்&rdquo; என்றும் மிகக் கடுமையாகக் கூறியுள்ளார். வலது சாரி அரசியல் நோக்கில் தயாரிக்கப்பட்ட தனது &nbsp;&lsquo;எமர்ஜென்சி&rsquo; படத்திற்கு ரஹ்மான் இசைய மைக்க மறுத்ததையே இதற்கு அவர் காரண மாகக் காட்டுகிறார். &ldquo;ஒரு காவி நிறக் கட்சியை ஆதரிப்பதால் நான் பாரபட்சத்தை எதிர்கொள்கிறேன், ஆனால் &nbsp;உங்களை விட வெறுப்பு நிறைந்த ஒருவரை நான் சந்தித்ததில்லை&rdquo; என்று எரிச்சலுடன் பாய்ந்துள்ள காங்கனா, ஒரு கலைஞர் தான் பணி யாற்றும் படைப்பைத் தேர்வு செய்யும் அடிப் படை உரிமையையே கேள்விக்கு உள்ளாக்கி, வெறுப்பை பதிவு செய்துள்ளார். ரஹ்மானின் தொழில்முறை முடிவுகளுக்கு இப்படி அரசி யல் சாயம் பூசுவது, மாற்றுக்கருத்துடைய கலை ஞர்களை ஒடுக்கும் எதேச்சதிகார மனோ பாவத்தின் வெளிப்பாடாகும். கட்டமைக்கப்பட்ட மறுப்புப் பிரச்சாரம் ரஹ்மானின் அனுபவங்களை நீர்த்துப்போகச் செய்ய திரைத்துறையின் ஒரு தரப்பினர் முயற்சி கள் மேற்கொண்டுள்ளதையும் காண முடிகிறது. &ldquo;50 ஆண்டுகளாக பாலிவுட்டில் மத பாகுபாடு இல்லை&rdquo; என்ற எழுத்தாளர் ஷோபா டே-யின் &nbsp;கருத்து, பாலிவுட்டின் மேலோட்டமான தோற்றத்தை மட்டுமே பார்க்கிறது. பாலிவுட்டில் சில முஸ்லீம் உச்ச நட்சத்திரங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதிகாரக் கட்டமைப்பில் நிகழும் &nbsp;ஆழமான மதவெறி மாற்றத்தை மறுப்பது ஒரு பலவீனமான வாதமாகும். அதேபோல், &ldquo;ரஹ்மான் சர்வதேச அளவில் பிஸியாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் அணுகத் தயங்குகிறார்கள்&rdquo; என்ற பாடலாசிரியர் ஜாவேத் அக்தரின் விளக்கம், பிரச்சனையைத் தனிநபர்மயமாக்கி கட்டமைப்பில் உள்ள குறையை மறைக்க முற்படுகிறது. பாடகர் ஷான் &ldquo;எனக்கும் வேலை குறைந்துள்ளது&rdquo; என்று கூறியிருப்பது, ஒரு தேசிய அளவி லான பிரச்சினையைத் தனிப்பட்டத் தொழில் &nbsp;முறைப் போட்டியாகச் சுருக்க முயலும் அணுகு முறையாகும். இவர்கள் அனைவரும் சில முஸ்லீம் பெயர்களை &lsquo;அடையாளப்பூர்வமாக&rsquo; (Tokenism) காட்டி, வேரூன்றி வரும் மதவாதப் பாகுபாட்டை மறைக்கத் துடிக்கிறார்கள். கலைத்துறையில் கார்ப்பரேட் - மதவாதக் கூட்டணி ரஹ்மான் சுட்டிக்காட்டிய காலகட்டத்தில் பாலிவுட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் உண்மையானவை. கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகரித்ததுடன், இசை நிறுவனங்கள் மற்றும் &nbsp;ஓடிடி (OTT) தளங்களின் பிடியில் கலை சிக்கிக் &nbsp;கொண்டது. படைப்பாற்றல் சார்ந்த முடிவு களை வணிக நோக்கங்கள் தீர்மானிக்கத் தொடங்கின. அதேசமயம் &lsquo;தி காஷ்மீர் ஃபைல்ஸ்&rsquo;, &lsquo;தி கேரளா ஸ்டோரி&rsquo;, &lsquo;சாவா&rsquo; போன்ற மதப் பிரிவினையைத் தூண்டும் படங்க ளுக்கு அரசு ரீதியிலான மற்றும் அரசியல் ஆத ரவு வெளிப்படையாகக் கிடைத்தது. முஸ்லீம் கலைஞர்கள் மீதான அழுத்தம் அதி கரிப்பதையும், &ldquo;தேசியவாதம்&rdquo; என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப் பாட்டை எடுக்க கலைஞர்கள் நிர்பந்திக்கப்படுவதையும் ரஹ்மான் மறைமுகமாகச் வெளிப்படுத்தி யுள்ளார் என்பதே உண்மை. &lsquo;சாவா&rsquo; படம் &nbsp;குறித்து அவர் பேசுகையில், &ldquo;இது பிரிவினை &nbsp;உணர்வைத் தூண்டும் படம், அந்தப் பிரி வினையை அது பணமாக்கியது&rdquo; என்று நேர்மையுடன் விமர்சித்தது, அவரது கலை அறத்தை வெளிப் படுத்துகிறது. ஜனநாயகத்திற்கு &nbsp;விடப்பட்ட சவால் ஏ.ஆர். ரஹ்மானின் இந்தப் பேட்டி யானது, இந்தியாவில் கலை மற்றும் &nbsp;கலாச்சாரத் துறைகளில் நிகழ்ந்து வரும் அபாயகரமான அதிகார மாற்றத் &nbsp;தின் ஒரு சிறு துளி. கார்ப்பரேட் நிறுவனங்களும் மத அடிப்படைவாத சக்திகளும் கைகோர்த்துப் படைப் பாற்றலைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கின்றன. உலக அளவில் இந்தியாவின் பெருமையாகக் கருதப்படும் ஒரு கலைஞருக்கே இந்த நிலை என்றால், சாமானியக் கலைஞர்களின் நிலை இன்னும் மோசமானது. &ldquo;படைப்பாற்றல் இல்லாத வர்கள் தீர்மானிக்கிறார்கள்&rdquo; என்ற ரஹ்மானின் எச்ச ரிக்கை மணி, இன் றைய இந்தியாவின் கலைச் சுதந்திரம் மற்றும் &nbsp;ஜனநாயக விழுமியங்களுக்கு விடப்பட்டுள்ள பெரும் சவால். இது ஒருகலைஞரின் தனிப்பட்ட குமு றல் அல்ல; மாறாக, அதிகா ரத்தின்பிடியில் கலைசிதைக்கப் படுவதைஎதிர்க்கும் ஒரு போர்க்குரல் என்றே கருத லாம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.