“ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் குட்டுதான் வைத்துள்ளது”
25 Nov 2025, 3:29 pm
<p><strong>“ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் குட்டுதான் வைத்துள்ளது” </strong></p>
<p>அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி சென்னை: திராவிடம் கற்பனை என்றும், தமிழ் நாட்டில் மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த பேட்டிக்கு அமைச்சர் எஸ். ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “திராவிடம் கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருப்பது ஆளுநருக்கு தெரி யாதா? தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதே ஆளுநரின் வேலை. கமலாலயத்திற்கு வேலை செய்ய வேண்டியவர் தவறுதலாக ஆளுநர் மாளிகைக்கு வந்துவிட்டார்” என்று கடுமையாக விமர்சித்தார். “திமுக அரசு யாருக்கும் எதிரான அரசு அல்ல. உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டுதான் வைத்துள்ளதே தவிர பாராட்டியது இல்லை. தேர்தல் நெருங்குவதால் ஆளுநர் வீணாக பழி சுமத்துகிறார். தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது. இந்தியை வைத்து மலிவான அரசி யல் செய்யும் பழக்கம் எங்களுக்கு இல்லை” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
