அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை பேரணியுடன் துவங்கியது
6 Dec 2025, 2:48 pm
<p><strong>அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை பேரணியுடன் துவங்கியது</strong></p>
<p>மதுரை, டிச. 6- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 16-ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை சனிக்கிழமை மதுரையில் பேரணியுடன் துவங்கியது. கருப்பாயூரணி நான்கு வழிச்சாலை யிலிருந்து பாண்டி கோவில் வரை பேரணி நடைபெற்து. அதன் விளைவாக, துவாரகா பேலஸ் மஹாலில், மாநிலத் தலைவர் ச. பாலகிருஷ்ணன் தலைமையில் பேரவை துவங்கியது. மாநிலச் செயலாளர் கா. சந்திர போஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியையும், வரவேற்புக்குழுத் தலைவரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளருமான இரா. தமிழ், அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன கொடியையும், மாநில பொதுச் செயலாளர் ரா. நவநீத கிருஷ்ணன் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க கொடியையும் ஏற்றிவைத்தனர். தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் கு. வெங்கடேசன் பேரவையைத் துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார், சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் எம். சௌந்தரராஜன் வாழ்த்திப் பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் ரா. நவநீதகிருஷ்ணன், மாநிலப் பொரு ளாளர் பி. விஜயன் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். ஞாயிற்றுக்கிழமையன்றும் பிரதி நிதித்துவப் பேரவை நடைபெறுகிறது.</p>
