தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்குரிமையை பறிக்கும் எஸ்.ஐ.ஆர்.: தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்திடுக! சிபிஎம் வலியுறுத்தல்!

21 Dec 2025, 11:33 am
வாக்குரிமையை பறிக்கும் எஸ்.ஐ.ஆர்.: தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்திடுக! சிபிஎம் வலியுறுத்தல்!
<p>வாக்குரிமையை&nbsp;பறிக்கும்&nbsp;எஸ்.ஐ.ஆர் தொடர்பான&nbsp;அனைத்து&nbsp;நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p> <p>இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:</p> <p>அவசர&nbsp;கோலத்தில்&nbsp;அள்ளித்&nbsp;தெளித்தது&nbsp;போல&nbsp;வாக்காளர்&nbsp;பட்டியல்&nbsp;திருத்தம்&nbsp;செய்ததை&nbsp;தள்ளி&nbsp;வைக்க&nbsp;வேண்டுமென்று&nbsp;மார்க்சிஸ்ட்&nbsp;கம்யூனிஸ்ட்&nbsp;கட்சி&nbsp;உட்பட&nbsp;பல்வேறு&nbsp;கட்சிகள்&nbsp;மற்றும்&nbsp;ஜனநாயக&nbsp;இயக்கங்கள்&nbsp;வேண்டுகோள்&nbsp;விடுத்திருந்தன.&nbsp;வழக்குகளும்&nbsp;உச்சநீதிமன்றத்தில்&nbsp;தொடுக்கப்பட்டு&nbsp;நிலுவையில்&nbsp;உள்ளன.&nbsp;இந்த&nbsp;நிலையில்&nbsp;எதிர்கட்சிகளின்&nbsp;கோரிக்கைகளைப்&nbsp;பற்றி&nbsp;ஆரம்பத்தில்&nbsp;காது&nbsp;கொடுக்காத&nbsp;தேர்தல்&nbsp;ஆணையம்&nbsp;பின்னர்&nbsp;வரைவு&nbsp;வாக்காளர்&nbsp;பட்டியல்&nbsp;வெளியிட&nbsp;&nbsp;கொடுக்கப்பட்ட&nbsp;அவகாசத்தை&nbsp;தன்னிச்சையாக&nbsp;10&nbsp;நாட்கள்&nbsp;நீட்டித்தது.&nbsp;&nbsp;இப்போது&nbsp;வரைவு&nbsp;வாக்காளர்&nbsp;பட்டியல்&nbsp;வெளியிடப்பட்டு&nbsp;சுமார்&nbsp;1&nbsp;கோடி&nbsp;பேர்&nbsp;வாக்காளர்&nbsp;பட்டியலிலிருந்து&nbsp;நீக்கப்பட்டிருக்கிறார்கள். 10&nbsp;நாட்கள்&nbsp;இடைவெளியில்&nbsp;புதிய&nbsp;வாக்காளர்&nbsp;சேர்ப்பு&nbsp;மற்றும்&nbsp;இடமாறுதல்களை&nbsp;முழுமையாக&nbsp;செய்திருக்க&nbsp;வாய்ப்பில்லை.&nbsp;இந்த&nbsp;காரணங்களால்&nbsp;தான்&nbsp;ஒரு&nbsp;கோடி&nbsp;வாக்காளர்கள்&nbsp;நீக்கப்பட்டிருக்கிறார்கள்.&nbsp;இப்போதும்&nbsp;உயிரோடு&nbsp;இருப்பவர்கள்&nbsp;சிலரது&nbsp;பெயர்கள்&nbsp;நீக்கப்பட்டிருப்பதும்,&nbsp;அவர்கள்&nbsp;இறந்து&nbsp;விட்டதாக&nbsp;காரணம்&nbsp;சொல்லியிருப்பதும்&nbsp;அதிர்ச்சியை&nbsp;ஏற்படுத்தியுள்ளது.&nbsp;அதேபோன்று&nbsp;மொத்தமாக&nbsp;நீக்கப்பட்ட&nbsp;பெயர்களில்&nbsp;68&nbsp;சதவிகிதம்&nbsp;பேர்&nbsp;அதாவது, 66&nbsp;லட்சம்&nbsp;பேர்&nbsp;முகவரி&nbsp;அற்றவர்கள்&nbsp;அல்லது&nbsp;காண&nbsp;முடியாதவர்கள்&nbsp;என்று&nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;இவர்கள்&nbsp;போலி&nbsp;வாக்காளர்கள்&nbsp;அல்ல.&nbsp;மாறாக,&nbsp;இதில்&nbsp;ஒரு&nbsp;கணிசமான&nbsp;பகுதியினர்&nbsp;கால&nbsp;அவகாசமின்மையால்&nbsp;உரிய&nbsp;முறையில்&nbsp;கவனம்&nbsp;செலுத்தாததால்&nbsp;விடுபட்டவர்களாக&nbsp;இருக்க&nbsp;வாய்ப்புண்டு.</p> <p>அதேபோல,27&nbsp;லட்சம்&nbsp;பேர்&nbsp;இறந்தவர்களாக&nbsp;அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.&nbsp;மொத்த&nbsp;வாக்காளர்களில்&nbsp;99&nbsp;சதவிகிதம்&nbsp;பேருக்கு&nbsp;படிவம்&nbsp;கொடுக்கப்பட்டதாகவும்&nbsp;அதில்&nbsp;99&nbsp;சதவிகிதம்&nbsp;படிவங்கள்&nbsp;திரும்ப&nbsp;பெறப்பட்டிருப்பதாகவும்&nbsp;தேர்தல்&nbsp;ஆணையம்&nbsp;தெரிவித்திருந்த&nbsp;நிலையில்&nbsp;இறந்தவர்&nbsp;எண்ணிக்கை&nbsp;முரண்பாடாக&nbsp;இருக்கிறது.&nbsp;தமிழ்நாட்டில்&nbsp;சராசரியாக&nbsp;அதிகபட்சமாக&nbsp;இறப்பு&nbsp;விகிதம்&nbsp;1000க்கு&nbsp;10&nbsp;என்கிற&nbsp;அளவிலேயே&nbsp;உள்ளது.&nbsp;பிறக்கும்&nbsp;குழந்தை&nbsp;முதல்&nbsp;18&nbsp;வயது&nbsp;நிறைவடையும்&nbsp;வரை&nbsp;உள்ளவர்களும்&nbsp;இதில்&nbsp;அடக்கம்.&nbsp;இவர்கள்&nbsp;அனைவரையும்&nbsp;சேர்த்தால்&nbsp;கூட&nbsp;இந்த&nbsp;அளவிற்கு&nbsp;இறந்தவர்கள்&nbsp;பெயர்&nbsp;இடம்பெற்றிருப்பதற்கு&nbsp;வாய்ப்பு&nbsp;கிடையாது. 1000க்கு&nbsp;10&nbsp;என்பதை&nbsp;கணக்கில்&nbsp;கொண்டால்&nbsp;எஸ்.ஐ.ஆர்.&nbsp;தொடங்கும்&nbsp;போது&nbsp;இருந்த&nbsp;6.41&nbsp;கோடி&nbsp;வாக்காளர்களில்&nbsp;ஆண்டுதோறும்&nbsp;இறப்பு&nbsp;எண்ணிக்கை&nbsp;7.69&nbsp;லட்சம்&nbsp;பேர்.&nbsp;இப்போது&nbsp;சொல்லப்பட்டிருக்கும்&nbsp;27&nbsp;லட்சம்&nbsp;பேர்&nbsp;என்பது&nbsp;மூன்றரை&nbsp;ஆண்டுகளில்&nbsp;இறந்தவர்களின்&nbsp;யாருடைய&nbsp;பெயரும்&nbsp;நீக்கப்படவில்லை&nbsp;என்பதாக&nbsp;பொருள்&nbsp;கொள்ளப்படும்.&nbsp;குழந்தைகள்,&nbsp;சிறார்கள், 18&nbsp;வயதிற்கு&nbsp;குறைவுடையோர்&nbsp;ஆகியோரில்&nbsp;இறந்தோரை&nbsp;நீக்கி&nbsp;விட்டுப்&nbsp;பார்த்தால்&nbsp;இது&nbsp;இன்னும்&nbsp;சில&nbsp;ஆண்டுகள்&nbsp;சேர்ந்து&nbsp;வரும். 2024ல்&nbsp;நாடாளுமன்ற&nbsp;தேர்தல், 2021ல்&nbsp;சட்டமன்ற&nbsp;தேர்தல்&nbsp;ஆகிய&nbsp;தேர்தல்களுக்கு&nbsp;முன்பாக&nbsp;இதேபோன்று&nbsp;சுருக்கமுறை&nbsp;திருத்தங்கள்&nbsp;செய்யப்பட்டதை&nbsp;நாம்&nbsp;அறிவோம்.&nbsp;அப்போதெல்லாம்&nbsp;இறந்தவர்கள்&nbsp;நீக்கப்படவே&nbsp;இல்லையா?&nbsp;என்கிற&nbsp;கேள்வி&nbsp;எழுகிறது.&nbsp;இதற்கு&nbsp;தேர்தல்&nbsp;ஆணையம்&nbsp;உரிய&nbsp;முறையில்&nbsp;பதிலளிக்கவில்லை.</p> <p>பொதுவாக,&nbsp;இந்தியாவில்&nbsp;மக்கள்&nbsp;தொகையை&nbsp;மதிப்பீடு&nbsp;செய்ய&nbsp;உத்தேசமான&nbsp;சில&nbsp;வழிமுறைகளை&nbsp;இந்திய&nbsp;அரசே&nbsp;வைத்திருக்கிறது.&nbsp;அதன்படி&nbsp;தமிழ்நாட்டில்&nbsp;இந்த&nbsp;ஆண்டின்&nbsp;ஆரம்பத்தில்&nbsp;7.74&nbsp;கோடி&nbsp;மக்கள்&nbsp;தொகை&nbsp;இருக்கலாம்&nbsp;என்றும்,&nbsp;அதில்&nbsp;6.26&nbsp;கோடி&nbsp;பேர்&nbsp;18&nbsp;வயது&nbsp;பூர்த்தியானவர்கள்&nbsp;என்றும்&nbsp;உத்தேசமாக&nbsp;கணக்கிடப்படுகிறது.&nbsp;எனில்,&nbsp;ஒட்டுமொத்த&nbsp;வாக்காளர்களின்&nbsp;எண்ணிக்கை&nbsp;இந்த&nbsp;அளவிற்கு&nbsp;இருக்க&nbsp;வேண்டும். 2015&nbsp;கணக்குப்படி&nbsp;சுமார்&nbsp;20&nbsp;லட்சம்&nbsp;பேர்&nbsp;தமிழ்நாட்டிலிருந்து&nbsp;வேறு&nbsp;மாநிலங்களுக்கு&nbsp;நிரந்தரமாக&nbsp;குடியேறியவர்களாகவும்,&nbsp;வேறு&nbsp;நாடுகளில்&nbsp;பணிபுரிபவர்களாகவும்&nbsp;இருக்கலாம்&nbsp;என்று&nbsp;கணக்கிடப்பட்டுள்ளது.&nbsp;இதில்&nbsp;பலருடைய&nbsp;பெயர்கள்&nbsp;வாக்காளர்&nbsp;பட்டியலில்&nbsp;இடம்பெற்றிருக்கலாம்&nbsp;என்கிற&nbsp;போதும்&nbsp;அதை&nbsp;அப்படியே&nbsp;எடுத்துக்&nbsp;கொண்டாலும்&nbsp;இப்போதைய&nbsp;நிலையில்&nbsp;30&nbsp;லட்சம்&nbsp;பேர்&nbsp;புலம்பெயர்ந்து&nbsp;விட்டதாக&nbsp;கொண்டு&nbsp;அவர்களுடைய&nbsp;பெயர்கள்&nbsp;எல்லாம்&nbsp;முழுமையாக&nbsp;நீக்கப்பட்டு&nbsp;விட்டதாக&nbsp;எடுத்துக்&nbsp;கொண்டால்&nbsp;கூட&nbsp;சுமார்&nbsp;6&nbsp;கோடி&nbsp;பேர்&nbsp;வாக்காளர்&nbsp;பட்டியலில்&nbsp;இடம்பெற்றிருக்க&nbsp;வேண்டும்.&nbsp;ஆனால், 57&nbsp;லட்சம்&nbsp;பேர்&nbsp;குறைவு&nbsp;ஏன்&nbsp;என்பதை&nbsp;தர்க்க&nbsp;ரீதியாகவும்,&nbsp;விபரங்களின்&nbsp;அடிப்படையிலும்&nbsp;தேர்தல்&nbsp;ஆணையம்&nbsp;விளக்கியிருக்க&nbsp;வேண்டும்.&nbsp;அதையும்&nbsp;தேர்தல்&nbsp;ஆணையம்&nbsp;செய்யவில்லை.</p> <p>இதேபோன்று,&nbsp;வரைவு&nbsp;வாக்காளர்&nbsp;பட்டியலில்&nbsp;விடுபட்டவர்கள்&nbsp;மற்றும்&nbsp;புதிதாக&nbsp;சேர்பவர்கள்&nbsp;இனி&nbsp;உறுதிமொழி&nbsp;படிவம்&nbsp;கொடுத்தால்&nbsp;தான்&nbsp;வாக்காளர்&nbsp;பட்டியலில்&nbsp;பெயர்&nbsp;சேர்க்கப்படும்&nbsp;என்பது&nbsp;முற்றிலும்&nbsp;தவறான&nbsp;நடைமுறையாகும்.&nbsp;குறிப்பிட்ட&nbsp;காலத்தில்&nbsp;படிவம்&nbsp;கொடுக்க&nbsp;வாய்ப்பில்லை&nbsp;என்பதாலோ&nbsp;அல்லது&nbsp;வாக்குச்சாவடி&nbsp;நிலை&nbsp;அலுவலர்கள்&nbsp;முறையாக&nbsp;செயல்படாததால்&nbsp;நீக்கப்பட்டிருந்தாலோ&nbsp;அவர்கள்&nbsp;புதிதாக&nbsp;ஆவணங்கள்&nbsp;கொடுக்க&nbsp;வேண்டும்,&nbsp;உறுதிமொழி&nbsp;படிவம்&nbsp;கொடுக்க&nbsp;வேண்டும்&nbsp;என்பதெல்லாம்&nbsp;கடுமையான&nbsp;தண்டணையாகும்.&nbsp;மீண்டும்&nbsp;வாக்காளர்&nbsp;திருத்தத்திற்கு&nbsp;பதிலாக&nbsp;வாக்காளர்&nbsp;நீக்கத்திற்கான&nbsp;வழிமுறைகளாகவே&nbsp;தெரிகின்றன.&nbsp;இதேபோன்று,&nbsp;உயிரோடு&nbsp;இருப்பவர்களை&nbsp;இறந்தவர்கள்&nbsp;என்று&nbsp;அறிவித்ததற்கு&nbsp;தேர்தல்&nbsp;ஆணையம்&nbsp;தான்&nbsp;பொறுப்பேற்க&nbsp;வேண்டும்.</p> <p>எனவே,&nbsp;இவற்றையெல்லாம்&nbsp;கணக்கில்&nbsp;கொண்டு&nbsp;தற்போதைய&nbsp;எஸ்.ஐ.ஆர்.&nbsp;நடைமுறையை&nbsp;நிறுத்தி&nbsp;வைக்க&nbsp;வேண்டுமென்று&nbsp;தேர்தல்&nbsp;ஆணையத்தையும்,&nbsp;இவ்வளவு&nbsp;முக்கியமான&nbsp;பிரச்சனையில்&nbsp;கால&nbsp;தாமதம்&nbsp;செய்வதை&nbsp;விடுத்து&nbsp;விரைவில்&nbsp;தீர்ப்பளிக்க&nbsp;வேண்டுமென்று&nbsp;உச்சநீதிமன்றத்தையும்&nbsp;மார்க்சிஸ்ட்&nbsp;கம்யூனிஸ்ட்&nbsp;கட்சியின்&nbsp;மாநில&nbsp;செயற்குழு&nbsp;வலியுறுத்துகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.