தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரம் 2 நீதிபதிகள் அமர்வின் கேள்வி பொருத்தமற்றது!

13 Dec 2025, 4:23 pm
திருப்பரங்குன்றம் விவகாரம் 2 நீதிபதிகள் அமர்வின் கேள்வி பொருத்தமற்றது!
<p><strong>திருப்பரங்குன்றம் விவகாரம் 2 நீதிபதிகள் அமர்வின் கேள்வி பொருத்தமற்றது!</strong></p> <p>சென்னை, டிச.13- திருப்பரங்குன்றம் விவ காரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர். &nbsp;சுவாமிநாதனின் உத்தர வுக்கு தடை கோரும் மேல் &nbsp;முறையீட்டு மனுக்கள், நீதி பதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ் ணன் ஆகியோர் அடங்கிய &nbsp;அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. &nbsp;அப்போது, &ldquo;தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் &nbsp;ஏற்றக் கூறும், அந்தக் கல் &nbsp;அமைப்பு, ஒரு தீபத்தூணா? &nbsp;என்பது அடிப்படைக் கேள்வி. குறைந்தபட்சம், ஏதோ ஒரு &nbsp;கால கட்டத்தில், அங்கு தீபம் ஏற்றியதற்கான, ஏற்கத்தக்க &nbsp;ஆதாரங்கள் சமர்ப்பித்திருந் &nbsp;தால் கூட அதைத் தீபத்தூண் &nbsp;என்று ஏற்றுக்கொள்ள முடி யும். ஆனால், ஒரு துண்டுச் சீட்டு ஆதாரம் கூட, சமர்ப் &nbsp;பிக்கப்படவில்லை. அத்து டன், தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு தாக் &nbsp;கல் செய்யப்பட்ட போது, &nbsp;இரண்டு நீதிபதிகள் அமர் வில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது&rdquo; என்று அரசுத் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. அனைத்தையும் கேட்ட &nbsp;நீதிபதிகள், &ldquo;தீபம் ஏற்றும் &nbsp;இடத்தை ஏன் மாற்றக் கூடாது?&rdquo; என்று கேள்வி எழுப்பி, வழக்கை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், விசார ணையின் போது, நீதிபதி கள் எழுப்பிய இந்தக் &nbsp;கேள்வியே பொருத்தமற் றது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் அவர், &ldquo;திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், வெள்ளிக்கிழமையன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 2 நீதிபதிகள் அமர்வு, &lsquo;நீதிமன்றம் தீபம் &nbsp;ஏற்றும் இடத்தை ஏன் &nbsp;மாற்றக்கூடாது&rsquo; என்று கேள்வி எழுப்பி உள்ளது. &nbsp;வழக்கமாக தீபம் ஏற்றப் படும் இடத்தை ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தையே மனுதாரரோ அல்லது நீதிமன்றமோ இது வரை தெரிவிக்காத நிலை யில், நீதிபதிகள் இத்தகைய கேள்வியைக் கேட்பது பொருத்தமற்றது!&rdquo; என்று குறிப் &nbsp;பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.