அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும்</strong></p>
<p>சேலம், டிச.31- அரசு போக்குவரத்து கழகங்களில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் சேலம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தனியார் மையக் கொள்கையின் ஒரு பகுதியாக அவுட் சோர்சிங் முறையை புகுத்துவதை ஏற்க முடியாது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் உத்தரவால் டயர் ரொட்டே சனுக்கு தாவிய கிளை அதிகாரிகள் பெயர் பராமரிப்பு காணாமல் போனது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழி லாளர்களின் பிரச்சனைகள் குறித்து கடிதம் கொடுத்தும் தகவல் பலகை மூலம் வேண்டு கோள் விடுத்தும் சரி செய்யாத நிர்வாகத் தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் ஒத்துக்கொண்டபடி அரியர் தொகையை வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி புதனன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதி யில் உள்ள விரைவு போக்குவரத்து கழக சேலம் பணிமனை முன்பு சிஐடியு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பணிமனை செயலாளர் லியாகத் அலி தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் செல்லப் பன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண் டலத் தலைவர் செம்பன், பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விரைவு போக்குவரத்து தொழிற்சங்க ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி மணிமுடி உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர்.</p>
