தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிப்.2 ஆம் தேதி அமைப்புக் குழு கூட்டம் அனைத்து பனியன் சங்க கூட்டத்தில் முடிவு

13 Jan 2026, 3:17 pm
பிப்.2 ஆம் தேதி அமைப்புக் குழு கூட்டம் அனைத்து பனியன் சங்க கூட்டத்தில் முடிவு
<p><strong>பிப்.2 ஆம் தேதி அமைப்புக் குழு கூட்டம் அனைத்து பனியன் சங்க கூட்டத்தில் முடிவு</strong></p> <p>திருப்பூர், ஜன.13- பிப். 12 வேலை நிறுத்தம் தொடர்பாக பிப்.2 &nbsp;ஆம் தேதி மாவட்ட அளவிலான போராட்ட &nbsp;அமைப்புக் &nbsp;குழு கூட்டம் நடத்துவது என &nbsp;அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டத்தில் &nbsp;முடிவு எடுக்கப்பட்டுள்ளது. &nbsp;பிப்.12 வேலை நிறுத்தம் குறித்து அனைத்து பனியன் தொழிலாளர் சங்கங்க ளின் கூட்டம் செவ்வாயன்று சிஐடியு அலுவ லகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு &nbsp;பனியன் சிஐடியு பனியன் சங்க பொதுச் செய லாளர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். சிஐடியு &nbsp;பனியன் சங்க பொருளாளர் நாகராஜ், ஏஐடி யுசி பனியன் சங்க பொதுச் செயலாளர் என். சேகர், மாவட்டச் செயலாளர் செந்தில்கு மார், &nbsp;எல்.பி.எப். பொருளாளர் பூபதி, ஐஎன்டி யுசி செந்தில்குமார், ரஜினி, எச்.எம்.எஸ். மாவட்டச் செயலாளர் முத்துசாமி, துணைச் &nbsp;செயலாளர் கோவிந்தசாமி, எம்.எல்.எப். மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், டி.டி. எம்.எஸ் செயலாளர் மனோகர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், நாடு முழுவதும் பிப்ரவரி 12ஆம் &nbsp;தேதி நடைபெறுகிற பொது வேலை நிறுத்தப் &nbsp;போராட்டம் குறித்து அனைத்து பனியன் உற் பத்தியாளர்கள் சங்கத்திற்கும், தொழிலாளர் &nbsp;துறையினருக்கும் நோட்டீஸ் வழங்குவது. ஒரு &nbsp;லட்சம் கோரிக்கை விளக்க நோட்டீஸ் மற்றும் &nbsp;போஸ்டர்கள் அடிப்பது. பிப்.2 ஆம் தேதி மாவட்ட அளவிலான அமைப்புக்குழு கூட்டம் &nbsp;நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.