பொறுத்தார் “புலி”யாள்வார்..!
9 Nov 2025, 2:33 pm
<p><strong>பொறுத்தார் “புலி”யாள்வார்..!</strong></p>
<p>கருப்புப் புலியைப் பார்ப்பதே அரிதாகும். அதை எப்படியாவது புகைப்படம் எடுத்து விடுவது என்று 120 நாட்களுக்கான திட்டமொன்றை பிரசென்ஜித் யாதவ் என்ற புகைப்படக்கலைஞர் தீட்டினார். ஒடிசாவின் புலிகள் காப்பகப் பகுதியில் அது இருக்கிறது என்ற செய்தியோடு காட்டுக்குள் இறங்கினார். கிட்டத்தட்ட சலித்துப் போகும் நிலை. ஆனால் 119 ஆவது நாளில் அவர் கருப்புப் புலியைப் பார்த்துவிட்டார். தனது காமிராவில் அதைப் பதிவு செய்திருக்கிறார். இந்தச் செய்தி வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல முன்னணி சர்வதேச நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளில் முதல் பக்கத்தை இந்தப் புலி அலங்கரித்துள்ளது.</p>
