மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடு எதிரொலி... கழிவு நீர் வடிகால் பணிகள் துவக்கம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடு எதிரொலி... கழிவு நீர் வடிகால் பணிகள் துவக்கம்</strong></p>
<p>சேலம், ஜன.7- புதிய சாக்கடை வசதி செய்திட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்ச ரிக்கை பலகை வைத்தும், மனு கொடுத்ததால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பணி களை துவங்கப்பட்டது. சேலம் மாநகராட்சி ஜாகீர் ரெட்டிப்பட்டி மந்த மாரியம்மன் கோவில் தெரு, நஞ்சப் பன் தெரு ஆகிய பகுதியில் உள்ள சாக்கடை மிகவும் பழுதடைந்து கழிவு நீர் தேங்கி அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்தியது. இதனை கண்டித்தும், புதிய சாக் கடை வசதி செய்து தரக்கூறியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி சேலம் மாநக ராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், ஒரு வார காலத்தில் புதிய சாக் கடை வசதி செய்து கொடுக்கவில்லை என் றால் அந்த பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்று சிபிஎம் சார்பில் எச்சரிக்கை பலகை வைத்த னர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து புதிய சாக்கடை வசதி செய்து கொடுக்க பணிகளை துவக்கி னார்கள். இந்நிகழ்ச்சியில் 1 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினர் தமிழரசன், சிபிஎம் மேற்கு மாநகர செயலாளர் எம்.கணேசன், கமிட்டி உறுப்பினர்கள் எம்.கனகராஜ், பி. பாலகிருஷ்ணன், டி.வெற்றிசெல்வன், கட்சி அலுவலக செயலாளர் பிச்சந்திரன், கிளை செயலாளர் ஜி.அழகேசன் உள்ளிட்ட கட்சி முன்னணி ஊழியர்கள், மாதர் சங்க தலை வர்கள், ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடனடியாக மக்கள் பிரச்சனை மீது நடவடிக்கை எடுத்து தீர்வு கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.</p>
