தீக்கதிர் முக்கிய செய்திகள்
18 Dec 2025, 4:38 pm
<p><strong>‘மடிக்கணினி திட்டத்தை முடக்க முடியாது!’</strong></p>
<p>சென்னை, டிச. 18- மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களால் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதாகவும், கல்லூரி மாணவர்களின் கல்விக் கனவை எப்படி சிதைக்கலாம் என சிந்திப்பதை எடப்பாடி பழனிசாமி கைவிடவேண்டும் என்றும் அவர் கூறினார். வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்றும், ஆனால், இந்த லேப்டாப் திட்டத்தை 2019-ஆம் ஆண்டே கைவிட்டு ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
