தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

24 Nov 2025, 3:26 pm
                                            விளையாட்டு
<p><strong>கவுகாத்தி டெஸ்டில் கல.. கல... வம்பு இழுத்த பண்ட் : &nbsp;பந்தை காற்றில் பறக்கவிட்ட முத்துச்சாமி</strong></p> <p>முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்க, அந்த அணி &nbsp;வீரர் செனுரன் முத்துச்சாமி நிதான &nbsp;ஆட்டத்துடன் விளையாடிக் கொண்டு இருந்தார். 124ஆவது ஓவரின் (வாஷிங்டன் சுந்தர் வீசினார்) 5 பந்தை வீசிய பின்பு &nbsp;(123.5) இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், கேப்டனுமான ரிஷப் பண்ட் &ldquo;அவரை அடிக்க விடுங்கப்பா (Let Him Hit)&rdquo; என தென் ஆப்பிரிக்க வீரர் &nbsp;செனுரன் முத்துச்சாமியை ஸ்லெட்ஜிங் (வம்பு) செய்தார். ஆனால் &ldquo;நன்றி (thank you)&rdquo; என்று கூறிவிட்டு, 123.6ஆவது பந்தில் (ஓவ ரின் கடைசிப் பந்து) செனுரன் முத்துச் சாமி பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார். &nbsp;இது சாதாரண சிக்ஸர் அல்ல. சரி யான கண்டிப்புடன் விளாசப்பட்ட பலம் பொருந்திய ஷாட் ஆகும். ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் வம்பு இழுத்த பண்டிற்கு சிக்ஸ் மூலம் பந்தை காற்றில் பறக்கவிட்டு பதிலடி கொடுத்தார். இதனை இந்திய ரசிகர்களும் கொண்டாடினர். &ldquo;சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி&rdquo; என்ற பழ மொழிக்கு ஏற்ப நிதானமாக விளை யாடிக் கொண்டிருந்த செனுரன் முத்துச் சாமியை அதிரடியாக விளையாட வைத்துள்ளார் நமது (இந்திய) அணியின் கேப்டன் பண்ட்.</p> <p><strong>செனுரன் முத்துசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்?</strong></p> <p>சரிவில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியை, சதமடித்து மீட்ட செனுரன் முத்துசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் தான் செனுரன் முத்துசாமி என செய்திகள் வெளியாகியுள்ளன. 7 வயதில் செனுரன் முத்துசாமி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு இடம்பெயர்ந்துள் ளார் என்றும், நாகப்பட்டினத்தில் இன்னும் இவர்களது உறவினர்கள் வசித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் செனுரன் முத்துசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><strong>7 ஆண்டுகளுக்குப் பிறகு &ldquo;பைசைக்கிள் கிக்&rdquo; 40 வயதில் ரொனால்டோ அசத்தல்</strong></p> <p>கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், போர்ச்சுகல் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது சவூதி அரேபியா கிளப் அணியான &ldquo;அல் நசார்&rdquo; அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிறன்று &nbsp;அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ரொனால்டோ &ldquo;பைசைக்கிள் கிக் (BICYCLE KICK)&rdquo; எனப்படும் தலைகீழாக பல்டி அடிக்கும் முறையில் மிகத் துல்லியமாக கோலடித்தார். 40 வயதில் 954ஆவது கோலை பைசைக்கிள் கிக் ரொனால்டோ அடித்துள்ளதை கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரொனால்டோ கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு ரியல் மாட்ரிட் (ஸ்பெயின் கிளப்) அணிக்காக பைசைக்கிள் கிக் கோலடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><strong>பிக் &nbsp;பாய்ண்ட்</strong></p> <p>ஆஸ்திரேலிய பேட்மிண்ட்ன் கோப்பையை கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றுள்ளார். இதற்குமுன் 2017ஆம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் பட்டம் வென்றிருந்தார்</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.