முந்தய பக்கம்

7 பேருக்கு மறுவாழ்வு அளித்த சிறுமி

25 Feb 2026, 3:22 pm
7 பேருக்கு மறுவாழ்வு அளித்த சிறுமி
<p><strong>7 பேருக்கு மறுவாழ்வு அளித்த சிறுமி</strong></p> <p>கோவை,பிப்.25- மூளைச் சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவ ரது பெற்றோர் முன் வந்ததன் மூலம், 7 &nbsp;நபர்களுக்குப் மறு வாழ்வு கிடைத்துள்ளது. கோவை மாநகராட்சி நகர் ஊர மைப்பு நிலைக்குழுத் தலைவரும், 73 &nbsp;ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரு மான டி.சந்தோஷ் - சுகன்யா தம்பதி யினரின் மகள் வெண்பா (8). இச் சிறுமிக்கு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி யன்று திடீரென ஏற்பட்ட உயர் &nbsp;ரத்த அழுத்தம் மற்றும் மூளையில் &nbsp;ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக &nbsp;மயக்கமடைந்தார். மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கள் பலனின்றி, புதனன்று சிறுமி வெண்பா மூளைச் சாவு அடைந்தார். &nbsp;தங்களது மகளின் இழப்பால் சொல் லொணாத் துயரத்தில் இருந்த நிலை யிலும், சமூக நலன் கருதி சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய &nbsp;அவரது தந்தை சந்தோஷ் மற்றும் &nbsp;தாய் சுகன்யா ஆகியோர் முன்வந்த னர். இதனைத் தொடர்ந்து, மருத்து வக் குழுவினர் சிறுமியின் கல்லீரல், சிறு நீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை &nbsp;மூலம் பெற்றனர். இதில் கல்லீரல் மற் றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச் &nbsp;மருத்துவமனையிலும், மற்றொரு சிறு நீரகம், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை கோவையில் உள்ள பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டன. தங்களது மகளின் உடல் உறுப்பு கள் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத் துள்ளது என்பது தங்களுக்கு பெருமி தம் அளிப்பதாக சிறுமியின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிறுமியின் இந்த உயரிய தியாகம் மற்றும் பெற்றோரின் மனிதாபிமானச் செயல், பொதுமக்களிடையே உடல் &nbsp;உறுப்பு தானம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் எனப் பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram