பங்கீடு முடிஞ்சாச்சு... ஆனா பங்கு பிரியல! இலை மேல் அமர்ந்து உள்ளடி பார்க்கும் தாமரை!
27 Mar 2026, 3:15 pm
<p><strong>பங்கீடு முடிஞ்சாச்சு... ஆனா பங்கு பிரியல! இலை மேல் அமர்ந்து உள்ளடி பார்க்கும் தாமரை!</strong></p>
<p>கோவை, மார்ச் 27- கூட்டணி தர்மம் என்பது ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது பழமொழி. ஆனால், கோவை கிணத்துக்கடவு தொகுதியிலோ, “கூடி வாழ்ந்தால் காலி பண்ணிடுவோம்” என்கிற ரீதியில் அதிமுக - பாஜக இடையே போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. “வசந்த காலம்” வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த கிணத்துக்கடவு பாஜக மாஜி மாவட்டத் தலைவர் வசந்தரா ஜனுக்கு, தொகுதி ஒதுக்கீட்டில் விழுந்தது பலத்த ‘அடி’. தொகுதி மீண்டும் அதிமுக விற்கே என்று தகவல் வெளியானதும், பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியில் ‘உறைந்து’ போய், ஆத்திரத்தில் ‘உருகி’ சாலைக்கு வந்துவிட்டனர். ஈச்சனாரி பகுதியில் வியாழ னன்று இரவு நடந்த சாலை மறியல், ‘ஆக்ஷன்’ பட பாணியில் அமைந்தது. “எங்களைக் கேட் காமல் எப்படி ஒதுக்கலாம்?” என்று முழக்க மிட்ட கையோடு, ஆர்வமிகுதியால் ஒரு தொண் டர் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு ‘தீக்கு ளிக்க’ முயல, அங்கு பதற்றம் ‘பீக்’ அடித் தது. நல்லவேளையாக போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால், விபரீதம் தவிர்க்கப் பட்டது. “உயிரைக் கொடுத்தாவது தொகு தியை வாங்குவோம்” என்ற ரேஞ்சுக்கு தொண்டர்கள் கொந்தளித்ததை பார்த்து, உயிரை கொடுத்த பிறகு தொகுதி எதுக்குடா என அங்கிருந்தவர்கள் நகைத்தது ஒரு புறம் இருக்க. இந்த விவகாரத்தின் பின்னணியில் முன் னால் தலைவர் அண்ணாமலை தரப்பிற்கும், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தரப்பிற்கும் இடையிலான “ஈகோ” யுத்தமே காரணம் என பாஜக வட்டாரங்களே கிசுகிசுக்கின் றன. போராட்டத்தில் ஈடுபட்ட சிலரோ ஒரு படி மேலே போய், “இப்போ அதிமுகவை தோற்க டிச்சாதான், அடுத்த முறை நமக்குப் பயந்து தொகுதியை ஒதுக்குவாங்க” என்று பகிரங்க மாகவே ‘உள்ளடி’ வேலைகளுக்கு அஸ்தி வாரம் போட்டுள்ளனர். இதனால், “கூட்ட ணிப் பூவே... எங்களை குத்திக் கிழிப் பாயோ?” என்ற அச்சத்தில் அதிமுகவினர் கிலியில் உள்ளனர். மொத்தத்தில், கிணத்துக்கடவு தொகு திப் பங்கீடு என்பது இரு கட்சிகளுக்கும் இடையே “காதலும் மோதலும்” கலந்த ஒரு மெகா சீரியலாக மாறியுள்ளது. தாமரை மலருமா அல்லது இலை மறைவில் காய் கருகிப்போகுமா என்பது போக போகத் தான் தெரியும்!</p>
