உடனே நடவடிக்கை எடுத்து புதிய குடும்ப அட்டை வழங்கிய ஆட்சியர்
16 Dec 2025, 3:51 pm
<p><strong>உடனே நடவடிக்கை எடுத்து புதிய குடும்ப அட்டை வழங்கிய ஆட்சியர்</strong></p>
<p>பெரம்பலூர், டிச.16- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 367 மனுக்களை பொதுமக்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, மாவட்ட நுகர்வோர் மற்றும் வழங்கல்துறை சார்பில், 27 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.</p>
