தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜன. 12 வரை வைகோ ‘சமத்துவ நடைப்பயணம்!’ - வைகோ பேட்டி

1 Jan 2026, 4:14 pm
ஜன. 12 வரை வைகோ ‘சமத்துவ நடைப்பயணம்!’ - வைகோ பேட்டி
<p><strong>முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஜன. 1- ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2 முதல் 12 வரை சமத்துவ நடைப்பயணம் செல்கிறார். அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான இதற்கான நிகழ்ச்சியில், மதிமுக முதன் மைச் செயலாளர் துரை.வைகோ &nbsp;எம்.பி. வரவேற்றுப் பேசுகிறார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்துப் பேசுகிறார். &nbsp;நடைப்பயணத்தை தி.மு.க. &nbsp;தலைவரும், தமிழக முதலமைச் சருமான மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்த நடைப்பயணம் மதுரையில் ஜன வரி 12 அன்று நிறைவடைகிறது.</p> <p><strong>ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கலவர முயற்சியை முறியடிப்போம்! -&nbsp;வைகோ பேட்டி&nbsp;</strong></p> <p>சமத்துவ நடைப்பயணத்தையொட்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் வியாழக்கிழமையன்று செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2022 பிப்ரவரியில் அலகாபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மாநாட்டில் 32 பக்கத்திற்கு பிரகடனம் வெளியிட்டார்கள். அந்த வாசகங்களை படிக்கும்போது தலை யில் இடி விழுவது போன்று இருந்தது. &nbsp;குறிப்பாக, இனி இந்தியா என்ற பெய ருக்கு பதிலாக &lsquo;பாரத்&rsquo; என்றுதான் அழைக்க வேண்டும். இந்தியாவின் தலைநகரம் தில்லியாக இருப்பதை மாற்றி, வாரணாசி தலைநகரமாக இருக்க வேண்டும். கிறிஸ் தவர்கள், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை &nbsp;இருக்கக் கூடாது. இந்தி, சமஸ்கிருதம்தான் இந்த நாட்டினுடைய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். வேறு எந்த மொழிக்கும் &nbsp;இடம் அளிக்கக் கூடாது என குறிப்பிடப் பட்டிருந்தது. இதுபோன்று அபாயகரமான அறிவிப்புகளை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.</p> <p>ஆனால், இதற்கு எந்தவித எதிர்ப்பையும் &nbsp;ஆளும் பாஜக அரசோ, நரேந்திர மோடியோ தெரி விக்கவில்லை. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் 100 ஆண்டுகளாக மோதல் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது சாதிய - மதவாத மோதல்களை தமிழ கத்திலும் உருவாக்கப் பார்க்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோ தரர்களாக ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற &nbsp;கருத்தை முழுமையாக வலியுறுத்தி &nbsp;திருச்சியில் இருந்து நடைப்பய ணத்தை தொடங்க உள்ளேன். தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இந்நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம். தினமும் 600 பேர் என்னுடன் நடைப் பயணத்தில் கலந்து கொள்வார்கள். ஒரு நாளைக்கு 15 முதல் 17 கிலோ &nbsp;மீட்டர் வரை நடைப்பயணம் மேற் கொள்ள உள்ளோம். &nbsp;இவ்வாறு வைகோ தெரிவித்தார். பேட்டியின் போது முதன்மை செய லாளர் துரை வைகோ எம்.பி., துணைப் &nbsp;பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொ கையா, தி.மு. ராஜேந்திரன், மாநிலப் பொருளாளர் செந்திலதிபன், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி, அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ குருநாதன், மாவட்டச் செய லாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டி.டி.சி. &nbsp;சேரன், பெரம்பலூர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன் மற்றும் நிர்வாகி கள் உடனிருந்தனர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.