முந்தய பக்கம்

ஜி.டி.நாயுடு உருவச்சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!

10 Mar 2026, 3:51 pm
ஜி.டி.நாயுடு உருவச்சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!
<p><strong>தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 10- ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாராபுரம் &nbsp;ஊராட்சி ஒன்றிய &nbsp;புதிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் &nbsp;இருந்து காணொலி காட்சி வாயிலாக செவ்வாயன்று திறந்து &nbsp;வைத்தார். &nbsp;திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய புதிய &nbsp;அலுவலகம் &nbsp;ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் &nbsp;திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் தரை தளம் &nbsp;மற்றும் &nbsp;முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய &nbsp;தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, பொறி யாளர்கள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அறைகளுடன் &nbsp;அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நி கழ்ச்சியின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை &nbsp;அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடன் இருந்தார். தாராபுரத்தில் &nbsp;மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி &nbsp;செல்வராஜ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், &nbsp;மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்தி கேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் &nbsp;க.சங்கமித்திரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொது மக்கள் என பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram