தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தால் பார்வையை இழந்து 116 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய சிறுவன்!

26 Dec 2025, 12:54 pm
கோல்ட்ரிஃப் இருமல் மருந்தால் பார்வையை இழந்து 116 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய சிறுவன்!
<p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 116 நாட்களுக்குப் பிறகு பார்வையை இழந்து வீடு திரும்பியுள்ளார்.&nbsp;<br /> மத்தியப் பிரதேச மாநிலத்தில் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்து 24 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிந்த்வாரா மாவட்டம் ஜட்டாச்சாப்பர் கிராமத்தைச் சேர்ந்த குனால் யாதுவன்ஷி, &lsquo;கோல்ட்ரிஃப்&rsquo; (Coldrif) என்ற இருமல் சிரப் குடித்த பிறகு தீவிரமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவராக இருந்தார். பல மாதங்கள் தீவிர சிகிச்சை, தொடர்ச்சியான டயாலிசிஸ் மற்றும் இடைவிடாத மருத்துவ பராமரிப்பின் மூலம் உயிர் தப்பியுள்ளார்<br /> ஆனால் மருந்தின் தாக்கத்தால் குனாலின் பார்வை நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரால் பார்க்க முடியவில்லை. மேலும் நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நிலை முழுமையாக சரியாகும் என உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.<br /> இந்நிலையில் 116 நாட்கள் மருத்துவ போராட்டத்திற்கு பிறகு குனால் இன்று வீடு திரும்பியுள்ளார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.