‘புகுந்த வீடு’ செய்த துரோகம்! ஏ.சி. சண்முகத்தின் பரிதாப நிலை!
4 Apr 2026, 4:02 pm
<p><strong>‘புகுந்த வீடு’ செய்த துரோகம்! ஏ.சி. சண்முகத்தின் பரிதாப நிலை!</strong></p>
<p>புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், அதிமுகவை ‘தாய் வீடு’ என்றும் பாஜகவை ‘புகுந்த வீடு’ என்றும் வர்ணித்தார். ஆனால், புகுந்த வீடு வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இவருக்கு இடமே ஒதுக்கவில்லை. “தாய் வீட்டில் இரட்டை இலை, புகுந்த வீட்டில் தாமரை” என ரசித்து ரசித்துப் பேசிய ஏ.சி. சண்முகத்திற்குப் பாஜக பெரிய ‘நாமம்’ போட்டுவிட்டது. துரோகம் செய்வது பாஜகவுக்குப் புதியதா என்ன? ‘புகுந்த வீட்டு’ப் பாசத்தை நம்பிப் போனவருக்குத் இப்போது தங்குவதற்கு இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலில் ‘வீடு’ மாற்றுபவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்!</p>
