தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 27.30 லட்சம் சாக்குகள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு

12 May 2026, 10:42 pm
கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த  27.30 லட்சம் சாக்குகள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு
<p><strong>கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 27.30 லட்சம் சாக்குகள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு</strong></p><p>தஞ்சாவூர், மே 12- தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. </p><p>இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படும். இது தவிர கோடைகால சாகுபடியும் மேற்கொள்ளப்படும். </p><p>தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. </p><p>மேலும், பல்வேறு இடங்களில் அறுவடை பணிகளும் தொடங்கியுள்ளன.</p><p> இந்த நிலையில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு, சாக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சாக்குகள் வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. </p><p>அதன்படி, செவ்வாய்க்கிழமை, கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில் 5,460 பேரல் சாக்குகள் தஞ்சைக்கு வந்தன. </p><p>ஒரு பேரல் என்பது 500 சாக்குகள் ஆகும். </p><p>அதன்படி 27,30,000 சாக்குகள் தஞ்சை வந்தன. </p><p>இதையடுத்து, ஏராளமான தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் இருந்து சாக்குகளை லாரிகளில் ஏற்றினர்.</p><p>இந்த சாக்குகள் தஞ்சை மாவட்டத்தில், அனைத்து தாலுகாவிலும் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.