வாழ்நாள் முழுவதும் செங்கொடிப் பற்று தள்ளாடும் வயதிலும் ‘டெக்ஸ்டூல்’ ரங்கசாமியின் தீரம்!
16 May 2026, 1:17 am
<p><strong>வாழ்நாள் முழுவதும் செங்கொடிப் பற்று தள்ளாடும் வயதிலும் ‘டெக்ஸ்டூல்’ ரங்கசாமியின் தீரம்!</strong></p><p>காலங்களும், காட்சிகளும் மாறினாலும், ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டின் கொள்கை உறுதி கடைசி மூச்சு வரை மாறாது என்ப தற்கு சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் தோழர் டெக்ஸ்டூல் ரங்கசாமி. </p><p>கோவை வடக்கு பகுதி, கணபதிபுதூரைச் சேர்ந்த 84 வயது முதிர்ந்த தோழர் ரங்கசாமி, தற்போது உடல்நலக்குறைவு காரணமாக தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார். </p><p>அவரை சந்திக்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்டக்குழு உறுப்பினர் மூர்த்தி, சித்தா தோட்டம் கிளைச் செயலாளர் அமுதா ஆகியோர் தோழர் ரங்கசாமியை காத்திருந்து சந் தித்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவம். </p><p>உடல் தளர்ந்திருக்கலாம், ஆனால் உள்ளத்தில் இன்னும் அந்தச் செந்நிறக் கனல் குறையவே இல்லை. </p><p>இன்றும் அவரது பொழுது விடிவது ‘தீக்கதிர்’ நாளிதழோடு தான்.</p><p> தொழிலாளி வர்க்கத்தின் வலிகளையும், போராட்டங்களையும் சுமந்து வரும் அந்த ஏடுதான் அவருக்கு இப்போதும் உற்றத் தோழன். </p><p>வெறும் பெயரளவில் கம்யூனிஸ்டாக இல்லாமல், களத்தில் நின்று களம் கண்டவர் ரங்கசாமி.</p><p> நீண்ட கால தொழிற்சங்க அனுபவம் கொண்ட இவர், தொழி லாளர்களின் உரிமைக்காகப் போராடி பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர். </p><p>அடக்கு முறைகளும், சிறைக்கம்பிகளும் அவரது வர்க்கப் போராட்ட உணர்வை ஒருபோதும் மழுங்கடிக்கச் செய்ததில்லை. </p><p>“எல்லாம் கட்சிக்கு...” - ஒரு உன்னத தியாகம் இந்தச் சந்திப்பின் மிக உருக்கமான தருணம், அவரது சொத்துரிமை குறித்த முடிவு தான். </p><p>கணபதிபுதூர் பகுதியில் இன்றும் செயல்பட்டு வரும் ‘மக்கள் மன்ற’ அலுவலகக் கட்டிடம், தோழர் ரங்கசாமி மற்றும் மறைந்த தோழர் ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோ ரின் பெயரிலேயே இருந்து வந்தது. </p><p>தன் அந்திமக் காலம் நெருங்குவதை உணர்ந்த நிலையிலும், ”நான் வாழ்ந்த இந்த இயக்கமே எனக்கு எல்லாம்” என்ற உயரிய நோக்கத்தில், அந்தச் சொத்தை முழுமை யாக கட்சியின் பெயருக்கே மாற்றிக் கொடுத்துள்ளார். </p><p>தன்னிடம் எஞ்சியிருப்பதையும் சமூக மாற்றத்திற்காக இயங்கும் பேரியக்கத்திற்கு அர்ப்பணித்த அவரது செயல், அடுத்து வரும் தலைமுறைக்கான பாடம். </p><p>சந்திப்பிற்குப் பின் பேசிய மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், இளம் வயதி லிருந்து இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சியிலும், சிஐடியு தொழிற்சங்கத்திலும் மாறாத பற்றோடு செயல்பட்டு வரும் தோழர் ரங்கசாமியை சந்தித்தது, ஒரு பெரும் மன நிறைவையும், போராட்ட உத்வேகத்தையும் அளிக்கிறது. </p><p>அவரது செங்கொடிப் பற்று வருங்கால தலைமுறைக்கு ஒரு பாடம்,” என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.</p>
