முந்தய பக்கம்

அரசு நிறுவனத்தில் கோவில் நிதி முதலீடா? உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

20 May 2026, 11:16 pm
அரசு நிறுவனத்தில் கோவில் நிதி முதலீடா? உயர் நீதிமன்றம்  நோட்டீஸ்
<p><strong>அரசு நிறுவனத்தில் கோவில் நிதி முதலீடா? உயர் நீதிமன்றம் நோட்டீஸ்</strong></p><p>சென்னை: கோவில் உபரி நிதியை தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை 2026 பிப்ர வரியில் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். </p><p>கோவில் சொத்துக்களும் நிதியும் பாதுகாக்கப் படுவதற்காக இயற்றப்பட்ட அறநிலையத்துறை சட்டத் திற்கு முரணாக இந்த அரசாணை அமைந்துள்ள தாக மனுவில் கூறப்பட்டிருந்தது.</p><p>சுமார் 2,700 கோடி ரூபாய் கோவில் நிதி சட்டவிரோதமாக அரசு நிறுவனங் களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் கோவில்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண் டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. </p><p>இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p> அப்போது, வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறு வனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை ஒத்திவைத்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram