முந்தய பக்கம்

யாரை தண்டிக்க தடை? - டெலிகிராம் நிறுவனர் கண்டனம்!

17 Jun 2026, 12:26 pm
யாரை தண்டிக்க தடை?  - டெலிகிராம் நிறுவனர் கண்டனம்!
<p>தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் சிலர் தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறி, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்ததற்கு டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்வு வினாத்தாள்களைக் கசியவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் டெலிகிராமைப் பயன்படுத்தும் 15 கோடிக்கும் அதிகமான சாதாரண பயனர்களையே இந்தத் தடை தண்டித்துள்ளது” என்று கூறியுள்ளார்.</p><p>மேலும், “டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. கசிந்த தகவல்கள் பிற செயலிகளுக்குச் சென்றுவிட்டன. எனவே, இந்த நடவடிக்கை அதன் நோக்கத்தை அடையத் தவறியுள்ளது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram