முந்தய பக்கம்

தெலுங்கானா மாணவர்களுக்கு காலை உணவில் தோசை, பூரி..!

28 May 2026, 9:59 pm
தெலுங்கானா  மாணவர்களுக்கு காலை உணவில் தோசை, பூரி..!
<p><strong>தெலுங்கானா மாணவர்களுக்கு காலை உணவில் தோசை, பூரி..!</strong></p><p>ஹைதராபாத், மே 28 - தெலுங்கானாவில் இடை நிலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட வுள்ளது. </p><p>இந்தத் திட்டத்தைத் ஜூன் 12 அன்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், இந்த காலை உணவுத் திட்டத்திற்கான உண வுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. </p><p>இந்தப் பட்டியலில் போண்டா, தோசை, பூரி, சிறுதானிய இட்லி, உப்புமா ஆகியவை இடம்பெற்றுள்ளன. </p><p>இவற்றிலிருந்து மாணவர்களுக்கு தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது. </p><p>மாணவர்களுக்கு முறையான ஊட்டச்சத்தை வழங்கும் வகை யில் இந்தப் பட்டியல் வடிவ மைக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சிற்றுண்டிகளில் சட்னி, சாம்பார், கலவை காய்கறி குருமா ஆகியவை வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு ஆண்டு தோறும் ரூ. 120 கோடி செலவிடும்.</p><p> மாநிலத்தில் உள்ள 1.92 லட்சம் இடைநிலை மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. </p><p>தெலுங்கானாவில், இடைநிலை மாணவர்களுக்கும் ஏற்கெனவே மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>தற்போது காலை உணவும் இணைக்கப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram