தீக்கதிர் முக்கிய செய்திகள்
10 May 2026, 8:47 pm
<p><strong>ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்</strong></p><p>லாலு பிரசாத்தை அவதூறாகப் பேசுவார்கள். வீட்டை காலி செய்வார்கள். ஆர்ஜேடி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வார்கள். சாதி அடிப்படையில் என்கவுண்ட்டர்களை நடத்துவார்கள். இதைத் தவிர பாஜக அரசால் வேறு என்ன தான் செய்துவிட முடியும்.? பார்க்கலாம்.</p><p><strong>ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா</strong></p><p>30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி போன்ற சிறிய பகுதிகளையும், 90 தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரையும் சமமாக நடத்துவதன் தர்க்கம் புரியவில்லை. இரண்டு அதிகார மைய (ஒன்றிய அரசு/துணைநிலை ஆளுநர் மற்றும் மாநில அரசு) முறை என்பது பேரழிவிற்கான வழி ஆகும்.</p><p><strong>காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்</strong></p><p>கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் அங்குள்ள தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை அழித்துவிடும். இந்தத் திட்டத்தின் தற்போதைய வடிவம், விவரங்களின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, ஆழமாகச் சிந்தித்து, மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். </p><p><strong>பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன்</strong></p><p>காவல்துறை விசாரணை தொடங்குவதற்கு முன்பே, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் சஞ்சய் பண்டிட் தனது மகனுக்கு எதிரான போக்சோ புகாரை ஒரு சதி என்று கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, அச்சமூட்டக்கூடியது. அவர் இப்போதைக்கு இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதே முறை.</p>
