தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணிமேம்பாட்டு ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டம் அரசு அலட்சியம்: ஆசிரியர்கள் கண்டனம்

28 Jan 2026, 2:33 pm
பணிமேம்பாட்டு ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டம் அரசு அலட்சியம்: ஆசிரியர்கள் கண்டனம்
<p><strong>பணிமேம்பாட்டு ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டம் அரசு அலட்சியம்: ஆசிரியர்கள் கண்டனம்</strong></p> <p>மதுரை, ஜன.28- தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசி ரியர்களுக்கு, அரசாணை எண்&ndash;5 (11.01.2021)ன் படி &nbsp;வழங்கப்பட வேண்டிய சட் &nbsp;டப்பூர்வமான பணிமேம் பாட்டு ஊதியம் மற்றும் அதற் &nbsp;கான நிலுவைத் தொகையை &nbsp;கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் தமிழக &nbsp;அரசு காலம் தாழ்த்தி வரு வதை கண்டித்து, அனைத்து &nbsp;பல்கலைக்கழக ஆசிரியர் &nbsp;சங்கம் (ஏயுடி) மற்றும் பல்க லைக்கழக ஆசிரியர் சங் கங்களின் கூட்டமைப்பான மூட்டா (MUTA) சார்பில் மாநி லம் தழுவிய காத்திருப்பு போராட்டம் கடந்த ஒரு வார மாக தொடர்ந்து நடைபெற்று &nbsp;வருகிறது. இந்த போராட்டத்தை தமி ழக அரசின் உயர் கல்வித் &nbsp;துறை நிர்வாகம் இதுவரை &nbsp;உரிய முறையில் கவனிக்கா மல் அலட்சியமாக நடந்து வருவதாக ஆசிரியர்கள் குற் &nbsp;றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக போராட்டம் &nbsp;மேலும் தீவிரமடைந்து, அரசு உதவி பெறும் கல்லூரி களின் வாயில்களில் தொட ர்ச்சியாக போராட்டம் நடை பெற்று வருகிறது. மதுரையில், மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்து டன் இணைந்த சமூக அறி வியல் கல்லூரி, கே.கே.நகர் &nbsp;வக்பு வாரியக் கல்லூரி, உசி லம்பட்டி பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் கல்லூரி, நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, பெருங்குடி சரஸ் &nbsp;வதி நாராயணா கல்லூரி, யாதவர் கல்லூரி, அமெரிக் கன் கல்லூரி உள்ளிட்ட அரசு உதவி பெறும் கல்லூரி களில் ஆசிரியர்கள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். போராட்டத்தில் பேசிய &nbsp;ஆசிரியர்கள், உயர்கல்வித் துறை வெளியிட்ட அர சாணையின் அடிப்படை யில் அரசுக் கல்லூரி ஆசிரி யர்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம் நிலுவைத் தொகை யுடன் வழங்கப்பட்டு வரும் &nbsp;நிலையில், அரசு உதவி &nbsp;பெறும் கல்லூரி ஆசிரியர் &nbsp;களுக்கு அதே பலன் வழங் &nbsp;கப்படாமல் பாகுபாடு காட் &nbsp;டப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்த போராட்டத்தில் மூட்டா பொதுச் செயலாளர் ஏ.டி.செந்தாமரை கண்ணன் கலந்து கொண்டு உரை யாற்றினார். அவர் பேசுகை யில், &ldquo;உயர்கல்வித்துறை அமைச்சர் ஜனவரி 2026-இல் பணிமேம்பாட்டுடன் கூடிய ஊதியம் வழங்கப்படும் என கொள்கை முடிவு அறி வித்திருந்த போதிலும், &nbsp;அதனை நடைமுறைப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஆசிரி யர்களை கடும் ஏமாற்றத் திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசு இனியும் அலட்சியம் காட்டினால், போராட்டங்கள் மேலும் தீவிரமடையும்&rdquo; என எச்சரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.