இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு
14 Nov 2025, 1:26 pm
<p><strong>இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு</strong></p>
<p>சென்னை, நவ. 14 - பள்ளிகளில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் களுக்கும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம். டெட் தேர்வில் தாள்-1 இடைநிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆக.11 ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு டெட் தேர்வு சனிக்கிழமை (நவ.15) தொடங்குகிறது. முதல் நாளில் டெட் தாள்-1 தேர்வும், 2 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தாள்-2 நடைபெற உள்ளன. தாள்-1 தேர்வில் 1,07,370 பேர், தாள்-2-இல் 3,73,438 பேர் என மொத்தம் 4,80,808 பேர் கலந்து கொள்கின்றனர். தாள்-1-க்கு 367 தேர்வு மையங்களும், தாள்-2-க்கு 1,241 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.</p>
