தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘குறைந்தபட்ச செயல்திறன் வளையத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள்’ : டிசிஎஸ் முடிவு

22 May 2026, 8:59 pm
‘குறைந்தபட்ச செயல்திறன் வளையத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள்’ : டிசிஎஸ் முடிவு
<p><strong>‘குறைந்தபட்ச செயல்திறன் வளையத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள்’ : டிசிஎஸ் முடிவு</strong></p><p>மும்பை, மே 22 - இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது சமீபத்திய ஊதிய உயர்வு மற்றும் மதிப்பீட்டுச் சுழற்சியில் குறைந்தபட்ச செயல்திறன் வளையமான ‘பேண்ட் டி’ (Band D) பிரிவின்கீழ் குறைந்தது 5 சதவீத ஊழியர்களை வகைப்படுத்து மாறு தனது மேலாளர்களுக்கு உத்தர விட்டுள்ளது. </p><p>அண்மையில் அந்நிறுவனம் மேற்கொண்ட பெரும் ஆள் குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, ஊழியர்களிடையே புதிய வேலைவாய்ப்புப் பாதுகாப்பற்ற தன்மையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p><strong>நிறுவனத்தின் இலக்கும் அழுத்தமும்</strong></p><p>நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அனுப்பியுள்ள உள் மின்னஞ்சல்களின்படி, வணிகப் பிரிவுகளின் பொறுப்பாளர்கள் ஆரம் பத்தில் சுமார் 3 சதவீத ஊழியர் களை (ஏறத்தாழ 17,500 பேர்) மட்டுமே ‘குறைந்த செயல்திறன் உடைய வர்கள்’ என அடையாளம் கண்டிருந்த னர். </p><p> ஆனால், நிறுவனம் நிர்ண யித்துள்ள 5 சதவீத இலக்கை எட்டும் பொருட்டு, மேலும் பல ஊழியர்களை தீவிரமாக ஆய்வு செய்து ‘பேண்ட் டி’ பிரிவில் சேர்க்குமாறு மனிதவளத் துறை மேலாளர்களை வற்புறுத்தி வரு வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>தற்போது 5,84,519 ஊழியர்களைக் கொண்டுள்ள டிசிஎஸ் நிறுவனத்தில், இந்த 5 சதவீத விநியோக முறை அமல்படுத்தப்பட்டால் சுமார் 29,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த மிகக் குறைந்த செயல்திறன் பட்டியலின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். </p><p><strong>ஊழியர்களின் கவலைகளும் விளைவுகளும்</strong> </p><p>பொதுவாக ‘பேண்ட் டி’ பிரிவில் வகைப்படுத்தப்படும் ஊழியர்களுக்கு மாறுபடும் ஊதியம் (Variable Pay) குறைக்கப்படுவதுடன், தற்போதைய திட்டங்களில் (Projects) இருந்து விடு விக்கப்பட்டு, செயல்திறன் மேம் பாட்டுத் திட்டங்களுக்கு உட்படுத்தப் படுவார்கள். </p><p>அங்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களது செயல்திறனை நிரூபிக்கத் தவறும்பட்சத்தில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. </p><p>ஏற்கெனவே, கடந்த நிதியாண்டில் ‘பேண்ட் டி’ பிரிவில் இருந்த பல ஊழி யர்கள் உட்பட சுமார் 2% ஊழியர்களை (ஏறத்தாழ 12,200 பேரை) நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்த நிலையில், மீண்டும் இத்தகைய இலக்கு அடிப்ப டையிலான கட்டாய மதிப்பீட்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது ஊழியர் களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.