தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிசிஎம்எஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

26 Jun 2026, 1:37 am
டிசிஎம்எஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!
<p><strong>டிசிஎம்எஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!</strong></p><p>நாமக்கல், ஜூன் 25- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் உற்பத்தியா ளர்கள் விற்பனை சங்கத்தில் அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரி வித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெற்றனர்.</p><p>நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு கொங்கணாபுரம், மல்லசமுத்திரம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இந்த சங்கம், விவசாயிகள் கொண்டு வரும் எள், மஞ்சள், பருத்தி உள்ளிட்ட விளை பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து வரு கிறது. </p><p>இங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக 60-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். </p><p>கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஊதிய ஒப் பந்தத்தில் 8.5 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் முதல் தொழிலாளர்களின் பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நிதி பிடித்தம் செய்யப்படாமல் சம்பளம் வழங்கப்பட்ட தாக கூறப்படுகிறது</p><p> இதன் மூலம் தொழிலாளர் களை அவுட்சோர்சிங் முறைக்கு மாற்ற நிர்வாகம் முயற்சிப்பதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் திங்களன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். </p><p>இத னால், சங்க நிர்வாகம் செவ்வாயன்று வெளி மாவட் டங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து பணிகளை மேற்கொண்டது. </p><p>இதையடுத்து ஏற் பட்ட பரபரப்பை தொடர்ந்து, திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், நகர காவல் ஆய்வாளர் வளர்மதி மற் றும் அரசு அதிகாரிகள் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். </p><p>இதில், ஜூலை 1 ஆம் தேதி சேலத்தில் தொழிலா ளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக் கப்படும் என ஒப்புதல் எட்டப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று மீண்டும் பணிக்கு திரும்ப சம்மதித்தனர். </p><p>இப்பேச்சுவார்த்தையில், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, சிபிஎம் நிர்வாகிகள் ஏ. ரங்கசாமி, ஏ.ஆதிநாராயணன், நகரச் செயலாளர் சீனிவாசன், டிசிஎம்எஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் கந்தசாமி, குருநாதன், வேலுச்சாமி, சரவணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.