பேட்டி கொடுத்த சிஐடியு சங்கத் தலைவரை சஸ்பெண்ட் செய்வதா? டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கண்டனம்
19 Jun 2026, 8:50 pm
<p><strong>பேட்டி கொடுத்த சிஐடியு சங்கத் தலைவரை சஸ்பெண்ட் செய்வதா? டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கண்டனம்</strong></p><p>சென்னை, ஜூன் 19 - ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த சிஐடியு டாஸ்மாக் சம்மேளனத் துணைப் பொதுச்செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணனை, விளக்கம் கேட்காமல் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ள நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து சம்மேளனப் பொதுச்செயலாளர் கே. திருச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், </p><p>“முன்அனுமதியின்றி அவப்பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி எடுக்கப்பட்டுள்ள இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கை தொழிற்சங்க செயல்பாடுகளை முடக்கும் நோக்கமுடையது. தேர்தல் பிரச்சாரத்தில் டாஸ்மாக் ஊழலை விமர்சித்த தவெக, தற்போது புதிய அரசை அமைத்த பின்பு விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவது மற்றும் கருத்துரிமையை மிதிப்பது ஏற்புடையதல்ல. </p><p>இந்தத் தொழிற்சங்க விரோத நடவடிக்கையைத் திரும்பப் பெற்று தொழிலமைதியை ஏற்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
