தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இளையான்குடி ஒன்றியத்தில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ வழங்கினார்

7 Jan 2026, 4:05 pm
இளையான்குடி ஒன்றியத்தில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ வழங்கினார்
<p><strong>இளையான்குடி ஒன்றியத்தில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ வழங்கினார்</strong></p> <p>சிவகங்கை, ஜன.7- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளை யான்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் &nbsp;அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி &nbsp;மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் &nbsp;விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப் பட்டன. இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிரா மம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டப் &nbsp;பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் &nbsp;கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், முனைவென்றி அரசு மேல் நிலைப் பள்ளி, சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி, இளையான்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலப் பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி &nbsp;உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் &nbsp;மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்எல்ஏ, &ldquo;மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங் களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்&rdquo; என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் கூட்டு றவு சங்கத் தலைவர் சுப.தமிழரசன், பேரூ ராட்சித் தலைவர் நஜிமுதீன், துணைத் தலைவர் இப்ராஹிம், திமுக விவசாய அணி &nbsp;அமைப்பாளர் காளிமுத்து, ஒன்றிய செயலா ளர் செல்வராசன், பள்ளி தலைமை ஆசி ரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.