தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி மறைவு முதலமைச்சர், அறிஞர்கள் இரங்கல்

13 May 2026, 11:39 pm
தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி மறைவு முதலமைச்சர், அறிஞர்கள் இரங்கல்
<p><strong>தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி மறைவு முதலமைச்சர், அறிஞர்கள் இரங்கல்</strong></p><p>சென்னை, மே 13- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவருமான முது பெரும் தமிழறிஞர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி (வயது 80) புதனன்று காலை சென்னையில் காலமானார். </p><p>உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், காலை இயற்கை எய்திய செய்தி தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்விப்புலத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய இவர், சுவடியியல், இலக்கணம் மற்றும் மொழியியல் துறை களில் ஆழமான புலமை கொண்டவர். </p><p>2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த காலத்தில், பல அரிய ஆய்வுத் திட்டங்களை முன்னெடுத்தார். </p><p>குறிப்பாக, பழந்தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டி அவற்றைப் பாதுகாப்பதிலும், செம்மை யான முறையில் பதிப்பிப்பதிலும் இவ ருடைய பங்களிப்பு ஈடு இணையற்றது. </p><p>செம்மொழித் தமிழாய்வு ஒன்றிய நிறுவனத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிய போது, தமிழ் மொழியின் தொன்மையைப் பறைசாற்றும் பல்வேறு உலகளாவிய முன்னெடுப்பு களை இவர் மேற்கொண்டார். </p><p>இவரது மறைவிற்குத் முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். </p><p>தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படும் இவரது உடல், தற்போது சென்னை பெருங்குடி திருமலை நகர் விரிவு பாரதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. </p><p>பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், மாணவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். </p><p>அன்னாரது இறுதி நிகழ்ச்சிகள் வியாழனன்று காலை 10 மணி அளவில் அவரது இல்லத்தில் தொடங்கி நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>மறைந்த தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி உடலுக்கு தமுஎகச மாநிலப் பொருளாளர் சைதை ஜெ, மாநில செயற்குழு உறுப்பினர் மயிலைபாலு, மாநிலக்குழு உறுப்பினர் ஃபாமிதா, தென்சென்னை மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.