தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வணிகர் பேரமைப்பு மாநாடு வலியுறுத்தல்

8 May 2026, 12:27 am
‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வணிகர் பேரமைப்பு மாநாடு வலியுறுத்தல்
<p><strong>‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வணிகர் பேரமைப்பு மாநாடு வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, மே 7- காவல்துறை அத்துமீறல்கள் மற்றும் சமூக விரோதிகளின் ‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலி யுறுத்தியுள்ளது. </p><p>தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43ஆவது வணிகர் தின மாநாடு “வணிகர் விழிப்புணர்வு எழுச்சி” மாநாடாக திருவாரூரில் மாநில த்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. </p><p>மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்த ராஜுலு வரவேற்றார். மாநாட்டு தீர் மானங்களை மாநில தலைமைச் செய லாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் முன்மொழிந்தார். மாநிலப் பொருளா ளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். </p><p>திரைப்பட நடிகரும், தொழிலதி பருமான லெஜண்ட் சரவணன், முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தங்கம்-வைரம் வியா பாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் செலானி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். </p><p>தீர்மானங்கள் தனிநபர் கடன் அதிகரிப்பை தவிர்க் கவும், உற்பத்தி சார்ந்த பொருளாதா ரத்தை கட்டமைக்கவும் அரசுகள் இலவசங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் உருவாகும் வரை சட்டங் களை வரைமுறைப்படுத்த வேண்டும், இலவசக் குடிநீர்: குடிநீருக்கான வரியை நீக்கி, பாதுகாக்கப்பட்ட குடிநீர்விலையில் லாமல் வழங்க வேண்டும். </p><p>ஊழல் வழக்குகளுக்கான தண்டனையை கடுமையாக்குவதோடு, மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவில் வணி கர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சிறு வணிகர்களை காக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். </p><p>ரிய மின் தகடுகள் அமைக்க மாநில அரசு மானியம் வழங்க வேண்டும்; வணிக உரிமங்களை ஆயுள் உரிமமாக மாற்ற வேண்டும், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஜி.எஸ்.டி சட்டங்களில் அறி யாமையால் தவறு செய்யும் வணிகர் களை குற்றவாளிகளாகக் கருதும் முறையை நீக்க வேண்டும். </p><p>பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும், ஆங்கிலேயர் கால அடிமைச் சட்டங்களை நீக்கி, வணி கர்களுக்கு எதிரான குற்ற சட்ட நட வடிக்கைகளை களைய வேண்டும். </p><p>நிலத்தடி நீரை பெருக்க ஆறுகளில் விரைந்து தடுப்பணைகள் கட்ட வேண்டும். அத்தியாவசிய எரிவாயு விநி யோகத்தைச் சீரமைக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயம் காக்க தரமான தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். </p><p>காவல்துறை அத்துமீறல் கள் மற்றும் சமூக விரோதிகளின் ‘மாமூல்’ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், திருவாரூர் மாவட்ட நலன் கருதி புதிய விரைவு ரயில்களை இயக்க வேண்டும், மூடப்பட்ட பார்சல் அலுவலகத்தை திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.</p><p> மே 5ஆம் தேதியை வணிகர் தினம் என அங்கீகரித்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.