முந்தய பக்கம்

தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! மதுரையில் கமல்ஹாசன் பேட்டி

15 Nov 2025, 4:09 pm
தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! மதுரையில் கமல்ஹாசன் பேட்டி
<p><strong>தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! மதுரையில் கமல்ஹாசன் பேட்டி</strong></p> <p>மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., கொடைக்கானல் செல்வதற்காக, சென்னையில் இருந்து வெள்ளியன்று பகல் மதுரை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது: பீகாரில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. அதை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். தமிழகமும் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். &nbsp;புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தி.மு.க.வை எதிரி என்று &nbsp;கூறி வருகிறார்கள். யாராக இருந்தாலும், இலக்கை உயர் வாக வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் அப்படி கூறலாம். உதாரணத்திற்கு நடிக்க வேண்டும் என்று சொன் னால், இருப்பதிலேயே சிறந்த நடிகர் போல எனது பிள்ளை வரவேண்டும் என்று நினைப்பார்கள். ஏழையாக &nbsp;இருப்பவர்கள் கூட தனது பிள்ளையை கொஞ்சும்போது, மகராசன் என்று தான் கொஞ்சுவார்கள். இது எல்லோ ருக்கும் இருக்கும் ஆசைதான் . இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram