தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆன்லைன் மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்!

19 Jul 2026, 9:31 pm
ஆன்லைன் மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்!
<p><strong>ஆன்லைன் மோசடி புகார்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆர்’ முறை அறிமுகம்!</strong></p><p>காவல்துறை புதிய திட்டம் சென்னை, ஜூலை 19 - ஆன்-​லைன் நிதி மோசடி புகார்​களுக்கு ‘இ-ஜீரோ எஃப்​ஐஆர்’ முறையை தமிழக காவல்​துறை அறி​முகம் செய்​துள்​ளது. இதன்​மூலம் ஆன்-​லைன் மோசடி​யில் இழந்த பணத்தை விரை​வாக மீட்​கும் வாய்ப்பு அதி​க​மாகும் என தமிழக காவல் ​துறை தெரி​வித்​துள்​ளது. </p><p>சமீப ​கால​மாக பகுதி நேர வேலை மோசடி, டிஜிட்​டல் கைது மோசடி, போலிக் கடன் செயலி, யுபிஐ மற்​றும் வங்கி கேஒய்சி மோசடி என பல்​வேறு வடிவங்​களில் சைபர் குற்​றங்​கள் அதி கரித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், ஆன்​-லைன் நிதி மோசடி புகார்​களை விரை​வாக பதிவு செய்​து, இழந்த பணத்தை மீட்​கும் நடவடிக்​கைகளை வலுப் ​படுத்த, தமிழக காவல்​துறை, ‘இ-ஜீரோ எஃப்​ஐஆர்’ என்ற புதிய திட்​டத்தை அறி​முகப்​படுத்தி உள்​ளது. </p><p>இதுகுறித்து தமிழக காவல்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “ஒன்றிய உள்​துறை அமைச்​சகத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, 1930 என்ற உதவி எண்​ணுடன் இந்த புதிய வசதி ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது. ஆன்​-லைன் மோசடி​யில் பணத்தை இழந்​தவர்​கள் உடனடி​யாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்​டும். </p><p>ரூ.1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான நிதி மோசடி புகார்​கள், குற்​றம் மற்​றும் குற்​ற​வாளி​கள் கண்​காணிப்பு வலை​யமைப்​புடன் தானாகவே ஒருங்​கிணைக்​கப்​பட்டு ‘இ-ஜீரோ எஃப்​ஐஆர்​’-ஆக பதிவு செய்​யப்​படும். பின்​னர், புகார் அளித்தவருக்​கு, ‘இ-ஜீரோ எஃப்​ஐஆர்’ பதிவு செய்​யப்​பட்ட விவரம் குறுஞ்​செய்​தி​யாக அனுப்​பப்​படும். புதிய சட்ட விதி​களின்​படி, புகார்​தா​ரர் தனது புகாரை உறு​திப்​படுத்த, குறிப்​பிட்ட சைபர் குற்ற காவல் நிலை​யத்​தில் 3 நாட்​களுக்​குள் நேரில் ஆஜ ராக வேண்​டும். புகார்​தா​ரர் நேரில் ஆஜராகி உறு​திப் ​படுத்​தி​யதும், அந்த ‘இ-ஜீரோ எஃப்​ஐஆர்’ சம்​பந்​தப்​பட்ட அதி​கார வரம்​புடைய காவல் நிலை​யத் துக்கு மாற்​றப்​பட்​டு, வழக்​க​மான எஃப்​ஐஆர்​-ஆக பதி​யப்​படும்.</p><p>பிஎன்​எஸ்​எஸ், 2023 பிரிவு 173-ன் கீழ் இந்த முறை செயல்​படுத்​தப்​படு​கிறது. இது அதி​கார வரம்பை பொருட்​படுத்​தாமல் புகார்​களை பதிவு செய்ய வழி​வகை செய்​கிறது. இதனால் சட்ட நட வடிக்​கைகள் தாமதமின்றி உடனடி​யாகத் தொடங்க முடிகிறது. இம்​முறை​யி​னால் தகவல்​கள் உடனுக்​குடன் பரி​மாறப்​படு​வ​தால், மோசடி செய்​பவர்​களின் வங்​கிக் கணக்கை விரை​வாக முடக்க முடி​யும். டிஜிட்​டல் ஆதா​ரங்​கள் உடனுக்​ குடன் பாது​காக்​கப்​படு​வ​தால், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் பணத்தை மீட்​டெடுக்​கும் வாய்ப்பு அதி​ கரிக்​கிறது. மேலும், ஒரே தகவலை பலமுறை பதிவு செய்ய வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை” என கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.