தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி மாற்றம்!
8 Apr 2026, 4:35 pm
<p>தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சாய்குமாரும், ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி ஆக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய்குமார் ஐ.ஏ.எஸ், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, புதிய ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி ஆக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு உடனடி அமலுக்கு வர வேண்டும்; அதிகாரிகள் பணியில் இணைந்தது குறித்த பணி ஏற்பு அறிக்கையை 08.04.2026 அன்று மாலை 6:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் அமர்த்தப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><br></p>
