நகராட்சி ஊழியர்கள் போராட்டம்
9 hours before
<p><strong>நகராட்சி ஊழியர்கள் போராட்டம்</strong></p><p>கடலூர், ஆக.27-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பணியிட மாறுதல், பதவி உயர்வுகளை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும்; காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும்; பதவி உயர்வுக்கான பணி விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர்.</p><p>சனி, ஞாயிறு, அரசு விடுமுறை மற்றும் அலுவலக நேரத்திற்குப் பின்னர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும் என்றும் கோரினர்.</p><p>கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தா சலம், வடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட நகராட்சிகளில் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.</p>
